Kumari Ananthan

மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தீய வாதியுமான குமரிஅனந்தன் ஆண்டு தோறும் காந்தி ஜெயந்தி தினத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பூரண மது விலக்கை வலியுறுத்தி ஆண்டு தோறும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அதன்படி 02.10.2018 செவ்வாய்க்கிழமையும் வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.