Skip to main content

‘ஆலை திறப்பது குறித்து மக்களின் கருத்துகளைக் கேட்பதே சரியானதாகும்..’ - ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தீர்மானம்

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

‘It is appropriate to hear the views of the people on the opening of the plant ..’ - people resolution


நாட்டில் நிலவுகிற ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆக்சிஜன் தயாரிப்பிற்காக மட்டுமே ஸ்டெர்லைட்டை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு (27.04.2021) ஸ்டெர்லைட் மக்கள் எதிர்ப்பு இயக்கம் சார்பில், ஆலை திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் போராட்டக் குழுவின் ஒழுங்கிணைப்பாளரான பாத்திமா பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். 

 

இந்தக் கூட்டத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் என்பது மக்கள் தன்னெழுச்சியாக முன்வந்து போராடியதால் ஆலை மூடப்பட்டது. எந்தவித அரசியல் கட்சிகளாலும் நடத்தப்படவில்லை. ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி தரலாம் என்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகள் மட்டுமே போதும் என்ற அடிப்படையில் முடிவு செய்தது கண்டிக்கத்தக்கது. ஆலை திறப்பது குறித்து மக்களின் கருத்துகளைக் கேட்பதே சரியானதாகும். அதனால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும், ஆலையிலுள்ள தாமிர உற்பத்தி அலகுகள் அத்தனையையும் பிரித்து அழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைப் பக்கம் உள்ள பண்டாரம்பட்டி கிராமத்தின் பொது மைதானத்திற்குத் திரண்டு வந்த மக்கள், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து, பண்டாரம்பட்டியின் வசந்தி மற்றும் அருணாதேவி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

 

‘It is appropriate to hear the views of the people on the opening of the plant ..’ - people resolution

 

இதையறிந்து ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.பி.ஜெயகுமார், சப் கலெக்டர் சிம்ரத்ஜித் சிங் உள்ளிட்ட அதிகாரிகள், கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது கரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக அனுமதியின்றி எதுவும் நடத்தக்கூடாது என்று தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக் குழுவின் வசந்தி, அருணாதேவி உள்ளிட்டோர் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாகத் தெரிவித்துக்கொண்டு கலைந்து சென்றனர். தவிர இன்றைய தினம் இதுகுறித்த கோரிக்கை மனுவை மாவட்டக் கலெக்டரிடம் அளிக்க உள்ளதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஸ்டெர்லைட் திறப்பு அறிவிப்பு சர்ச்சையாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

இரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
police confiscated liquor  who were smuggled in luxury car in Thoothukudi

இந்தியாவில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தொடங்கிய காரணத்தால், தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு விலக்கு பகுதியில் வாகன சோதனை நடைபெற்றுள்ளது. சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அந்தக் காரை கவனித்த போலீசார், உடனே காரை நிறுத்தும்படி சைகை காண்பித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அந்தக் கார் வேகமாக வந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், உடனே அந்தக் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்தக் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, அந்தக் காரில் தேர்தல் செலவிற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா?... என்ற கோணத்தில் காரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த சொகுசு காருக்குள் விலை உயர்ந்த 12 பீர் பாட்டில்கள் இருந்துள்ளது. ஆனால், அந்த வகை மதுபாட்டில் அரசு மதுபான கடைகளில் கிடைக்காது என சொல்லப்படுகிறது. இதனால், இது குறித்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் எந்த பதிலும் கூறவில்லை என சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அதே காருக்குள் பெரிய பை ஒன்று இருந்துள்ளது. அந்தப் பையில் என்ன இருக்கிறது என சோதனையிட்ட போலீசாருக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.

காரணம் அந்தப் பையில் மேலும் சில மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களை வைத்திருந்தது குறித்து ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கார் ஓட்டுனர், நாகர்கோவிலைச் சேர்ந்த வினோத்குமாரின் மகன் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த விலை உயர்வான மதுபாட்டில்கள் எந்த இடத்தில் வாங்கப்பட்டது என வாய்த்திறக்கவில்லை.

அதே சமயத்தில் இந்த மது பாட்டில்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்காக வாங்கி வரப்பட்டதா?... என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அந்த ஓட்டுநரை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில், மது பாட்டிலோடு வந்த சொகுசு கார் ஒன்று, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.