Skip to main content

கர்ப்பிணிப் பெண் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

INCIDENT IN KALLAKURICHI

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ளது கீழாத்துக்குழி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரது மகன் ஈஸ்வரன் (30). இவருக்கு ரேவதி (25) என்ற மனைவியுள்ளார். இந்தத் தம்பதிக்கு, 5 வயதில் புஷ்பா, 2 வயது யமுனா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 

 

இந்நிலையில், ரேவதி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஈஸ்வரனின் அண்ணன் மகேந்திரன், அவரின் மனைவி அலமேலு. இவர்களுக்கு, கதிரேசன், கேசவர்த்தினி என இரு பிள்ளைகள் உள்ளனர். மகேந்திரன் சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் கும்பலுடன் செல்லும்போது நடந்த கார் விபத்து தீயில் கருகி பலியாகியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவரது மனைவி அலமேலுவை ஈஸ்வரனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு உறவினர்கள் ஒன்று கூடி ஊர் பஞ்சாயத்தில் பேசி முடிவு செய்துள்ளனர். இதனால் ஈஸ்வரனுக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த ரேவதி நேற்று முன்தினம் மாலை, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் காலை வரை அவரும் குழந்தைகளும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் ரேவதியும் குழந்தைகளும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை அதே ஊரைச் சேர்ந்த சின்னையன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றின் அருகே ரேவதியின் செருப்பு கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள், சந்தேகம் அடைந்துள்ளனர். உடனே கிணற்றில் இறங்கித் தேடியுள்ளனர். அந்தக் கிணற்றில் ரேவதி, புஷ்பா, யமுனா ஆகிய மூவரின் உடல்களும் கிடந்துள்ளன. மூன்று உடல்நிலையும் உடனடியாக வெளியே கொண்டு வந்தனர்.

 

cnc

 

இந்தத் தகவல் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராமநாதன், கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்துபோன மூவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, கரியாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறந்து போன சம்பவம் கல்வராயன் மலைப் பகுதி கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.