Skip to main content

அடுத்த 2 மணி நேரம் வீட்டில் இருப்போருக்கு கொண்டாட்டம்.... வாகன ஓட்டிகளுக்கு திண்டாட்டம்!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

hjk

 

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

சென்னை சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்துவருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இன்று (05.10.2021) அதிகாலையில் இருந்து கோயம்பேடு, கிண்டி, வடபழனி, சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, எழுப்பூர், சென்டரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி, வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோயம்பேடு பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்