Skip to main content

உதயநிதி வருகை ; கொங்கு உற்சாகம் 

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

 

தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மேற்கு மாவட்டமான கொங்கு மண்டலத்தில் முதல் நிகழ்ச்சியாக இன்று ஈரோடு வந்திருந்தார். 

 

u

 

கொங்கு மண்டலத்தில் பிரதானமாக உள்ள கொங்கு வேளாள கவுண்டர்களின் அடையாளமாக போற்றப்படக் கூடியவர் சுதந்திர போராட்ட வீரரான தியாகி தீரன் சின்னமலை. ஆங்கிலேயர்களால் தீரன் சின்னமலை சிறைபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட நாள் ஆடி-18. 

 

u

 

இந்த நினைவு தினம் அரசு நிகழ்ச்சியாக ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது. கவுண்டர் சமுதாய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் தீரன் சின்னமலையின் சொந்த ஊரான அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். ஏற்கனவே இங்கு திமுக தலைவரான மு. க. ஸ்டாலின் வந்து சென்றுள்ளார்.

 

 இந்த நிலையில் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று கொங்கு மண்டலத்தில் முதல் நிகழ்ச்சியாக தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வாக இன்று உதயநிதி ஸ்டாலின் நேரில் வருகை தந்து தீரன் சின்னமலை சிலைக்கு மலர் மாலை சூடி மரியாதை செலுத்தினார். அதிமுகவில் 10 அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டும் ஒரே ஒரு அமைச்சரான செங்கோட்டையன் மட்டும் வந்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் வருகை கவுண்டர் சமூகத்திற்கு உற்சாகமும் கொங்கு மண்டல திமுகவுக்கு உத்வேகத்தையும்  கொடுத்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள் (படங்கள்)

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று  (18.01.2023) காலை  11.00 மணியளவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை  சார்பில்  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து  நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

 

Next Story

கதறி அழுத பொன்முடி; ஆறுதல் தெரிவித்த உதயநிதி

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Ponmudi cried; Udhayanidhi expressed his condolences

 

அமைச்சர் பொன்முடியின் தம்பியான தியாகராஜன் பிரபல சிறுநீரக சிறப்பு மருத்துவராவார். கடந்த சில நாட்களாக தியாகராஜன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவர் தியாகராஜன் உயிரிழந்தார்.

 

இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மருத்துவர் தியாகராஜனுக்கு பத்மினி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். மருத்துவர் தியாகராஜனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “அமைச்சர் பொன்முடியின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

 

மருத்துவர் தியாகராஜனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலினிடம் தம்பியை இழந்து வாடும் அமைச்சர் பொன்முடி கதறி அழுதார். அவருக்கு உதயநிதி ஆறுதல் தெரிவித்தார். உடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.