Skip to main content

கூகுள் மேப் வைத்து ஆடுகள் திருட்டு... பொதுமக்களிடம் சிக்கிய கும்பல்!

Published on 19/09/2021 | Edited on 19/09/2021

 

Goat theft with Google Map ... Gang trapped in public!

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வீடுகளில் கட்டியிருக்கும் ஆடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், புள்ளாண்விடுதி, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் சில மாதங்களில் பல ஆடுகள் திருடுபோய் உள்ளது. இதேபோல தான் தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில் சொர்ணக்காடு, மணக்காடு, சித்தாதிக்காடு உள்பட பல கிராமங்களிலும் தொடர் ஆடு திருட்டுகள் நடந்து வருகிறது. சிலர் காவல்நிலையங்களில் புகார் கொடுத்தாலும் பலர் புகார் கொடுக்கவில்லை.

 

இந்நிலையில் கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இரண்டு ஆடுகளை விற்க வந்த தஞ்சை மாவட்டம் சொர்ணக்காடு கிராமத்தைச் சேர்ந்த புதுக்காளியம்மன்கோயில் தெரு, கந்தசாமி என்பவரது மகன் வல்லரசு (27) மற்றும் கொலக்குடி மாந்தோப்பு, மாணிக்கம் என்பவரது மகன் ராமநாதன் (23) ஆகிய இரு ஆடு திருடர்களையும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், மணக்காட்டில் திருடிய 2 ஆடுகளையும் பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் எங்களுக்கெல்லாம் தலைவர் ஆடு கிடை போடும் ஒருவர் தான் என்பதையும் கூறியுள்ளனர். 

 

Goat theft with Google Map ... Gang trapped in public!

 

அதேபோல இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிக்காடு கிராமத்தில் ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் ஏற்றும்போது ஆடு உதறியதால் தவறி விழுந்த இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்ற இருவர் தப்பிச் சென்றுவிட்டனர். ஆடு திருடர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களிடம் விசாரித்தபோது,  இதேபகுதியில் கிடை போட்டுள்ள ஆடுகள் வளர்ப்பவரிடம் வேலை செய்கிறோம் என்றும் எங்களைப் போல புளிச்சங்காடு கைகாட்டியில் இருவர் ஆடு திருடச் செல்வோம், ஆடுகளை திருடிக் கொண்டு செல்ல கூகுள் மேப் பார்த்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். 

 

பிடிபட்டவர்களில் ஒருவன் பண்ருட்டி சண்முகசுந்தரம், மற்றொருவன் கடலூர் ரஞ்சித் என்றும் பெயர்களை கூறியுள்ளனர். ஒருவன் தனது அப்பா பிரமலமான அரசியல்வாதி வீட்டில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளான். இவர்களை நன்கு கவனித்து விசாரித்த பொதுமக்கள், பேராவூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் காத்திருந்த பிறகு காவல் நிலையத்திற்கு டிஎஸ்பி வருகிறார் திருடர்களை அழைத்துச் சென்று பிறகு அழைத்து வாருங்கள் என்று ஒரு பொறுப்பான காவல் அதிகாரிகள் அனுப்பியதால் எங்கே அழைத்துச் சென்று பாதுகாப்பது என்று தெரியாமல் ஆடு திருடர்களை மதியம் வரை ஒரு டீ க்கடையில் அமர வைத்து பொதுமக்களே. பாதுகாத்துள்ளனர்.

 

மதியத்திற்கு பிறகு பல தரப்பிலிருந்து அழுத்தம் கிடைத்த பிறகே பேராவூரணி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆடு திருடர்கள் பேரவூரணியில் பிடிபட்ட தகவல் அறிந்தவர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி பகுதியில் ஆடுகளை பறிகொடுத்தவர்கள் வேகமாக பேராவூரணி செல்லுங்கள் என்று பதிவிட்ட நிலையில் ஏராளமானவர்கள் சென்றுள்ளனர். சிக்கியிருக்கும் ஆடு திருடர்களை சரியாக விசாரித்தால் எங்கெல்லாம் திருடினார்கள், யாரிடம் விற்றார்கள், இவர்களின் நெட்வொர்க் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு மொத்தமாக அனைவரையும் பிடிக்கலாம் என்கின்றனர் ஆடுகளை பறி கொடுத்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.