Skip to main content

கல்லூரியில் பெண் துப்புரவு பணியாளருக்கு பாலியல் வன்கொடுமை! -மீண்டும் விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவு!

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

கல்லூரியில் பெண் துப்புரவு பணியாளருக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணையை மீண்டும் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

highcourt

 



சென்னை நூதன்சேரியைச் சேர்ந்த செல்வி என்பவர் மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் கடந்த 22 ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இக்கல்லூரியில்,  கடந்த 2013-ம் ஆண்டு முதல்வராக இருந்த முகமது இக்பால் என்பவர், செல்வியை  சாதியைக் கூறி அழைத்து  பாலியல் தொல்லை கொடுத்தாகக் கூறி மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தான் கொடுத்த புகாரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல், குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் காவல்துறை செயல்பட்டதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தெரிவிக்கப்பட்ட புகார்களில் கல்லுரி முதல்வருக்குத் தொடர்பில்லை எனக் கூறி ஆலந்தூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்தது.  இந்த அறிக்கையை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைக்கவில்லை  என குறிப்பிட்டிருந்தார். எனவே இந்த வழக்கை காவல்துறை உதவி ஆணையருக்கு இணையான அதிகாரிகளிடம் மாற்றி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் காவல் துறையின் உதவி ஆணையருக்கு இணையான அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.