Skip to main content

வருமானவரித்துறைக்கு தகவல் தந்தது யார்? கண்டறிந்துவிட்டாரா துரைமுருகன் ?

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 


கடந்த வாரம் திமுக பொருளாளரும், வேலூர் தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் கதிர்ஆனந்த் அப்பாவுமான துரைமுருகனின் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் நள்ளிரவில் ரெய்டு செய்தனர். அவரது வீடு மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களான வேலூர் மேற்கு மாவட்ட முன்னால் மா.செ தேவராஜ் வீடு, குடியாத்தம் சக்கரவர்த்தி வீடுகளில் ரெய்டு செய்தனர். துரைமுருகன் வீட்டில் இருந்து மட்டும் 10 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அறிவித்தது.

 

d

 

இந்நிலையில் இன்று ஏப்ரல் 1ந்தேதி காலை முதல் கதிர்ஆனந்த் நடத்தும் பொறியியல் கல்லூரி, துரைமுருகன் ஆதரவாளரும், முன்னாள்  பகுதி கழக செயலாளருமான சீனுவாசன் வீடு, கி.செ பெருமாள் வீடு, துரைமுருகன் உதவியாளர் அஸ்கர்அலி வீடு என 8 இடங்களில் ரெய்டு செய்கிறது வருமானவரித்துறை. இந்த ரெய்டுகள் மூலம் சுமார் 18 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தரப்பில் இருந்து தகவல்கள் வருகின்றன. இன்னும் ரெய்டு முடியாததால், முடிந்தபின்பே உண்மை என்ன என்பது தெரியவரும்.

 


திமுக வேட்பாளராக கதிர்ஆனந்த் களத்தில் உள்ளார். எதிர்தரப்பில் அதிமுக சின்னத்தில் புதிய நீதிகட்சி ஏ.சி.சண்முகம் களத்தில் உள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு கதிர்ஆனந்த்தின் அப்பாவும், திமுக பொருளாளருமான துரைமுருகன் இல்லத்தில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தபோது, கழிசடை அரசியல் வாதிகள் என் மகன் வெற்றி பெற்றுவிடுவான் என எண்ணி வருமானவரித்துறையை ஏவியுள்ளார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் பனங்காட்டு நரியான திமுக அஞ்சாது என்றார்.


இதற்கு பதிலளித்த ஏ.சி.சண்முகம், எனக்கும் இந்த ரெய்டுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. என்னை சீண்டினால் அவர் ஒரு மாதத்துக்கு தூங்க முடியாது. அவருடைய சொத்துக்கள் எங்கங்கு உள்ளது என்பது எனக்கு முழுதும் தெரியும் என மிரட்டுவது போல் தகவல் கூறினார். அப்போதே திமுக பிரமுகர்கள் துரைமுருகனிடம், நம்மாளுங்க யாரோ சரியா சண்முகத்திடம் உங்களைப்பற்றி கூறியுள்ளார்கள் என சிலரின் பெயர்களை சொல்லியுள்ளார்கள். இதன் பின்னால் சாதி பாசம் மட்டும்மல்ல பணமும் விளையாடுகிறது என தகவல் சொல்லியுள்ளனர். அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.

 


இன்று ( ஏப்ரல் 1 ) ந்தேதி நடைபெறும் ரெய்டு துல்லியமாக நடத்தப்படுகிறது.  தேர்தலுக்கான பணம் எங்கங்கு துரைமுருகனால் தந்து வைக்கப்பட்டுயிருந்தது என்பதை சரியாக வருமானவரித்துறைக்கு போட்டு தந்துள்ளனர். இந்த தகவல் மாவட்ட நிர்வாகிகள் சிலருக்கும், அவருடனே உள்ள, அவரது ஆதரவாளர்கள் வெகு சிலருக்கு மட்டும்மே தெரிந்தது, வருமானவரித்துறைக்கு தெரிந்தது என்றால், தனது கட்சியை சேர்ந்த, தன்னால் வளர்த்துவிடப்பட்ட, தனது ஆதரவாளர்கள் போல் நடிப்பவர்கள் தான் தெரிவித்திருக்க வேண்டும் என துரைமுருகன் தரப்பு சந்தேகப்படுகிறது.

 


இதுப்பற்றி அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, துரைமுருகனை பழிவாங்குவதாக நினைத்து, கட்சிக்கு துரோகம் செய்துள்ளார்கள். இந்த துரோகத்தை யார் செய்தார்கள் என்பது கிட்டதட்ட கட்டறிந்துவிட்டார், அண்ணா, அண்ணா எனச்சொல்லிக்கொண்டே குழிபறித்துள்ளார்கள். இந்த துரோகத்துக்கான விலை நிச்சயம் ஒருநாள் அவர்களுக்கு கிடைக்கும் என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்