Skip to main content

பாஜகவிற்கு எதிரான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒருங்கிணைக்கும்- பிரகாஷ்காரத் பேச்சு! 

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு, கலை இரவு, கடலூர் மாவட்ட கட்சியின் வரலாற்று நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில்  நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை வகிக்க, மாநிலக்குழு உறுப்பினர் மூசா முன்னிலை வகித்தார். 


அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்புரையாற்றி பேசுகையில், " இந்திய விடுதலை போராட்டம், தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது கம்யூனிஸ்டு கட்சி. அந்த தியாகிகளின் தியாகம் வீண் போகாது. பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் சுதந்திர போரில் ஈடுபடவில்லை. அவர்கள் ஆங்கிலேயரை விட இஸ்லாமியர்களை தான் எதிரிகளாக நினைத்தார்கள்.


1964- ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிதாமகன்களான ஏ.கே.கோபாலன் உள்ளிட்ட 9 பேர் சுதந்திர போராட்டத்திற்காக 34 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஒரு நாள் கூட சிறையில் இருந்தது இல்லை. ஆனால், அவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். பாஜக இந்திய தேசிய வாதம் பேசாமல், இந்து தேசிய வாதம் தான் பேசுகிறது.
 

cuddalore Marxist Party unites against all parties in BJP - Prakash Karat speech


 


பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறார். அரசுக்கு எதிராக யாராவது கருத்து கூறினால், தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இது ஆங்கிலேயர் அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே தலைவர் என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பாஜக கடைபிடித்து வருகிறது. ஜனநாயகத்தை முற்றிலும் தகர்க்கும் முறையை கடைபிடித்து வருகிறார்கள்.
 

சுதந்திரத்துக்கு பின்னர் ஒன்றியங்களை ஒன்றிணைக்கும் பேச்சு வார்த்தையின் போது காஷ்மீருக்கு 370 என்ற சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு சுயாட்சி அந்தஸ்து வழங்கி தான் சேர்க்கப்பட்டது. ஆனால் இந்திய யூனியன் என்ற நிலையை ஒரே சட்டத்தில் பாஜக தகர்த்து விட்டது. இந்திய பொருளாதாரம் தற்போது சரிவை நோக்கி செல்கிறது. ஆட்டோமொபைல் துறையில் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வருகின்றனர். அதேபோல் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

பாஜக ஒரு கையால் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதையும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்துவதையும் செய்துக்கொண்டே, மறு கையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க கடன் தள்ளுபடி செய்கிறது. தற்போது ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரயில்வே துறையில் தனியார் மயத்தை எதிர்த்து மோடியின் தொகுதியான வாரணாசியில் கூட ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 

cuddalore Marxist Party unites against all parties in BJP - Prakash Karat speech


 


அனைத்து தொழிலாளர்களும் தற்போது மத்திய அரசிற்கு எதிராக போராடி வருகின்றனர். இப்போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒருங்கிணைத்து நடத்தும். தமிழகம் தனது சுய உரிமைக்காக தீவிரமாக போராடி வரும் மாநிலம். இப்போராட்டம் வரும் நாட்களில் தீவிரமடையும். மக்களவையில் எதிர்க்கட்சியினர் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் எடுத்துச் சென்று அவர்களை எதிர்க் கட்சியாக மாற்றுவோம்"  என்றார்.


அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், "மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை மூலமாக 20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசுப்பள்ளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி கட்சியின் சார்பில் 1 கோடி கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இந்த கொள்கை மூலமாக தமிழகத்தில் 1 பள்ளியை மூடுவதற்குக் கூட மார்க்சிஸ்ட் அனுமதிக்காது"  என்றார்.


மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், " மோடி என்றால் வளர்ச்சி என்று கூறினார்கள். இப்போது, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறோம். 15 ஆண்டுகளாக இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருவதாக நாங்கள் கூறியதை இப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே ஒத்துக்கொண்டார். ஆனாலும், அதனை சரிசெய்வதாகக் கூறி மீண்டும் கார்ப்பரேட், உள்நாடு, வெளிநாட்டு முதலாளிகளுக்கே சலுகைகளை வாரி வழங்குகிறார். 


சாதாரண மக்கள், தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. கல்விக்கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து போன்ற நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழகத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத ஆட்சியே நடக்கிறது. இவர்களை வீட்டிற்கு அனுப்ப மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்"  என்றார். அதனை தொடர்ந்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசினார். கட்சியின் வரலாற்று நூல் வெளியீடு, மூத்த நிர்வாகிகள் கௌரவிப்பு, கலை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன. முன்னதாக மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன் வரவேற்று பேசினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.