Skip to main content

'புடி பேப்பர... டெஸ்ட் எழுது' ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தேர்வு வைத்த காவல்துறை!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
 

ரப



இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் பொதுமக்கள் சாலைகளில் நடமாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஊரடங்கு பற்றியும், நோயின் தாக்கம் குறித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். போலிசார் தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை எச்சரித்து அனுப்புகிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகியள்ள வீடியோ ஒன்றில் அவ்வாறு செல்பவர்களை பிடித்து போலிசார் டெஸ்ட் வைத்துள்ளார்கள். அதில், கரோனாவிற்காக எத்தனை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது, கரோனாவின் காதலி யார், தேவையில்லாமல் ஊர் சுற்றலாமா? என்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பிறகு அவர்களை முட்டி போடவைத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்