Skip to main content

கோவை மாணவி தற்கொலை: சிக்கும் புதிய நபர்... ரகசியம் சொன்ன காவல்துறை...

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

Coimbatore student case; The secret told by the police!

 

10/2021 - கோவை தனியார் பள்ளி மாணவியின் தற்கொலை வழக்கு எண் இது.

 

பாலியல் தொல்லை, தற்கொலைக்குத் தூண்டுதல், போக்ஸோ ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் என்கிற மீரா ஜாக்சன் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களைக் கஸ்டடி எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருக்கின்றனர்.

 

இந்நிலையில், நாம் ஏற்கனவே சந்தேகத்துடன் குறிப்பிட்டிருந்த, பத்திரிகை, மீடியாக்களிடம் ‘என் நண்பியை இழந்துவிட்டேன்' என்றும் அழுது புலம்பிய மாணவியின் நண்பன் வைஷ்ணவை தூக்கிக்கொண்டு போயிருக்கிறது போலீஸ். "அவனிடம் விசாரித்ததில் நிறைய உண்மைகள் வந்துள்ளன” என்ற மகளிர் போலீஸ் ஒருவர், மேலும் சில விவரங்களையும் தெரிவித்தார்.

 

"மிதுன் தவறாக நடந்துகொண்டதைப் பற்றித் தன்னிடம் அவள் சொன்னதாக, எங்களிடம் சொன்னான் வைஷ்ணவ். எங்களுக்கு அப்பவே இடித்தது. ஒரு பெண், தனக்கு நடந்ததை சக தோழியிடம் சொல்லாமல் ஒரு ஆணிடம் சொல்வாளா? அப்படியே சொன்னாலும் வைஷ்ணவுக்கும், அந்த மாணவிக்கும் என்ன நட்பு இருந்தது? என சந்தேகம் வந்தது. ‘என் நண்பியை இழந்துவிட்டேன்' என மீடியாக்கள், பத்திரிகைகள் முன் அவன் அழுததில் சந்தேகம் கொண்டே அவனைத் தூக்கிவந்தோம்.

 

‘நான் அந்த மாணவியை விரும்பினேன். அவளும் என்னை விரும்பினாள். ஆங்காங்கே சுற்றிவந்தோம். இந்நிலையில்தான் மிதுன் மாஸ்டர் தவறாக நடந்துகொண்டார் என்பதை அவளது தோழி மூலம் அறிந்துகொண்டேன்; கடுங்கோபமானேன். அதற்குள் அவளிடம் மிதுன் எல்லை மீறிவிட்டதாக அவள் தோழி மூலமே அறிந்துகொண்டு கொதிக்க ஆரம்பித்துவிட்டேன். அவளுக்கு ஃபோன்செய்து, மிதுன் உன்னிடம் தவறாக நடந்துகொண்டார்தானே..? இதை உன் பேரண்ட்ஸிடம் சொல்லியே ஆவேன்? என்றேன். ஓ.. என அழ ஆரம்பித்துவிட்டாள்.

 

ஒருபக்கம் மிதுனின் டார்ச்சரால் அழுதுகொண்டிருந்தாள். அந்த சமயம், நான் ‘பேரண்ட்ஸிடம் சொல்லுவேன்' என மிரட்டிக்கொண்டிருந்தேன். இந்த நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்ளாமல்தான் அவள் தூக்கிட்டுக்கொண்டாள் என்றான்.’ அவனையும் இந்த வழக்கில் கைது செய்து முக்கியக் குற்றவாளியாய் சேர்க்கவிருக்கிறோம்'' என்கிறார்கள் மகளிர் போலீசார்.

 

தற்கொலை செய்துகொண்ட மாணவிக்குப் பள்ளிக்கூட நிர்வாகமே, பெற்றோர்களுக்குத் தெரியாமல் உளவியல் மருத்துவர் மூலம் ஆலோசனை வழங்கியிருக்கிறது. யார் அந்த மருத்துவர்? என நாம் துருவியபோது, மகளிர் போலீஸ் தரப்பிலிருந்தே சில விவரங்கள் கிடைத்தன.

 

"ஆமாம்... ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர்தான் பள்ளிக்கூடத்திற்கே சென்று ஆலோசனை அளித்திருக்கிறார். பள்ளி நிர்வாகம் சொல்லிக்கொடுத்த சமாளிப்பு வார்த்தைகளையே அந்த மருத்துவர் உளவியல் ஆலோசனை என்ற பெயரில் மாணவிக்கு வழங்கியிருக்கிறார். அந்தப் பெண் மருத்துவர் இப்போது தலைமறைவாகியிருக்கிறார். அவரைப் பிடிக்கவும் முயற்சி எடுத்துவருகிறோம்” என்கிறார்கள் மகளிர் போலீசார்.

 

மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட இரண்டு பேர் யார்? வேறு யாரேனும் தற்கொலைக்குத் தூண்டினார்களா? தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? உள்ளிட்டவை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

இந்நிலையில், மாணவியின் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், மாணவியின் நோட்டு புத்தகங்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் வீட்டிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

 

எல்லாம் வேகமாகத்தான் நடக்கிறது. அந்த மாணவியின் தற்கொலைக்கு நீதியும், அதற்கு காரணமானவர்களுக்குத் தண்டனையும் விரைவாக கிடைக்குமா?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.