Skip to main content

தொடங்கியது தென்மேற்கு பருவமழை!! வற்றிய அணைகளுக்கு நீர்வரத்து!!

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

கடந்த கால வடகிழக்குப் பருவ மழை தீய்ந்து போனதின் காரணமாக வற்றாத ஜீவ நதியான தென்மாவட்டத்தின் தாமிரபரணியாறு வற்றிப்போக  தொடங்கியது. ஆனால் அதிர்ஷ்டத்தின் பார்வையால். அதன் முந்தைய கோடைப் பருவமான தென் மேற்குப் பருவமழையினால் மே, ஜூன், ஜூலை தொடர் மாதங்களில் நான்ஸ்டாப்பாக  பெருக்கெடுத்தது வெள்ளம். வாராத தேவதையாக வந்து கொட்டிய மழையின் பலனாக நெல்லை மாவட்டத்தினுள்ள குறிப்பாக தென் மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டிய ஆறு அணைகளும் நிரம்பி மறுகால் ஓடியது கோடைகால ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

 

Southwest monsoon rain started!!



இதனால தாமிரபரணியை குடிநீர் ஆதாராமாக நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற நான்கு மாவட்ட மக்களும் பயனடைந்தனர். அதன்பின் செப்டம்பர் அக்டோபரில் பொழியும் வடகிழக்கு பருவமழை காலைவாரியதால் கோடையில் நிரம்பிய அணைநீர் நான்கு மாவட்ட மக்களுக்கும் தொடர்ந்து உதவியது. ஒரு லெவலுக்கு மேல் போனதும் அணைகள் வறண்டன. வழக்கமான கோடை அக்னி வெயில் கடந்த பிப்ரவரி முதல் ஜூன் ஆரம்பம் வரை நான்கு மாதங்கள் கொளுத்தி எடுத்தது. 

 

 

Southwest monsoon rain started!!

 

வெப்பத்தில் உச்ச அளவு கோல் 105 டிகிரி சென்ட்டிகிரேடாக உயர்ந்தது.  இதன் விளைவு அணைகளின் வறட்சி காரணமாக நான்கு மாவட்டத்திலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் துயரத்திற்குள்ளார்கள். சோதனையாக நெல்லை மாவட்டத்தைக் கோடையில் காப்பாற்றுகிற தென்மேற்கு பருவமழை மே இறுதியில் தொடங்க வேண்டியது 10 நாட்கள் தாமதமானது. 

 

Southwest monsoon rain started!!



இதனிடையே நேற்றிரவு தென்மேற்குப் பருவ மழை கேரளாவின் கொட்டத் தொடங்கியது, பத்தனம் திட்டா, கொல்லம் ஆரியங்காவு பகுதிகளில் பெய்ததின் விளைவு நெல்லை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை பெய்ததால் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்தது. தாமிரபரணியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 7 மி.மீ மழை பெய்ய, தண்ணீர் ஊற்றெடுத்து பாபநாசம் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது. தற்போது முதற்கட்டமாக 47.11 கன அடியாகி ஒரே நாளில் 12 அடி அணைநீர்  உயர்ந்து 31 அடியானது. இது, வரும் நாட்களில் உயரும் என்கிறார்கள் கண்காணிப்பு பொறியாளர்கள்.

நம்புவோம். நம்பிக்கை கொடுத்திருக்கிறது தென்மேற்குப் பருவமழை.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.