Skip to main content

“எங்க ஏரியாவுக்கு எதுக்கு வந்தீங்க?” - இளைஞர்களைத் தாக்கிய கிராமத்தினர்! 

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

viruthunagar district, village peoples youngster incident police

 

‘சாதிக் கண்’ கொண்டு பார்ப்பதையே வழக்கமாக வைத்திருந்தால், தமிழகத்தில் எந்த ஒரு கிராமமும் நிம்மதியாக இருந்துவிட முடியாது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேண்டுராயபுரமும், துலுக்கபட்டியும் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.   

 

என்ன விவகாரம் இது?

 

வேண்டுராயபுரம் கிராமத்தில், கடந்த சில நாட்களாக ஆடு, கோழிகள் திருடுபோவது வழக்கமாக இருந்திருக்கிறது. இதுகுறித்து மல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், இன்று (30.04.2021) அதிகாலை 04.00 மணியளவில், அந்த வழியாக துலுக்கபட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரனும், சதீஸ்வரனும் டூ வீலரில் வந்திருக்கின்றனர். இருவரையும் அந்தக் கிராமத்தினர் பிடித்து வைத்துக்கொண்டு, “யாருடா நீங்க? எந்த ஏரியா?” என்று விசாரித்துள்ளனர். அவர்கள்,  தங்கள் கிராமத்தின் பெயரைச் சொல்ல, “இந்த நேரத்துல எங்க ஏரியா வழியா எதுக்கு வந்தீங்க? அதான், வேற ரூட் இருக்குல்ல?” என்று விசாரித்தபடியே, மாறி மாறி தாக்கியதோடு, மல்லி காவல் நிலையத்துக்கும் இழுத்துச் சென்றனர். அங்கிருந்த போலீசார் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர்.

 

viruthunagar district, village peoples youngster incident police

 

சாதி அடிப்படையில் தங்களைத் தாக்கியதாக மாரீஸ்வரனுக்கும், சதீஸ்வரனுக்கும் மன உளைச்சல் ஏற்பட, சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று ‘அட்மிட்’ ஆனார்கள். இந்த விவகாரம், துலுக்கபட்டி கிராமத்தினரை வேகப்படுத்த, அடித்தவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிவகாசி - விளாம்பட்டி பிரதான சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். உடனே, காவல்துறையினர் குவிக்கப்பட்டு கிராமத்தினரைக் கலைந்துபோகும்படி எச்சரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் ஓடிவர, தடுக்க முற்பட்ட பெண் காவலர் தடுமாறி கீழே விழுந்தார். ஹேர்பின் குத்தியதால் ரத்தம் கசிந்து முகத்தில் வழிய, ‘பெண் காவலர் மண்டை உடைந்தது’ என்று அந்த இடம் பரபரப்பானது. ‘அய்யோ! போலீஸ் விவகாரமாகிவிட்டதே!’ என்று அதிர்ச்சியடைந்த கூட்டத்தினரை, காவல்துறையால் கலைக்க முடிந்தது.

 

துலுக்கப்பட்டி கிராமத்தினர் தரப்பில் “ரெண்டு பேரும் வேலைக்குப் போன பசங்க. இவங்க டூ வீலர்ல சாதி அடையாளம் தெரியற மாதிரி இன்டிகேட்டர் லைட் செட் பண்ணிருந்தாங்க. இது வேண்டுராயபுரத்துல உள்ளவங்களுக்குப் பொறுக்கல. ஏற்கனவே ஆடு, கோழி திருடுபோன கோபத்துல இருந்தவங்க, ஊரைக் காவல் காக்கணும்னு ரவுண்ட்ஸ் வந்திருக்காங்க. அப்பத்தான் அவங்க கண்ணுல எங்க பசங்க சிக்கி அடி வாங்கிருக்காங்க.” என்றனர்.

viruthunagar district, village peoples youngster incident police

 

மல்லி காவல் நிலையத்தில், பட்டியலின இளைஞர்களை அடித்ததாக, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வேண்டுராயபுரம் கிராமத்தினர் 6 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. சாலை மறியல் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய துலுக்கபட்டி கிராமத்தினரும் வழக்கைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.