Skip to main content

திமுக ஐடி விங்க் பொறுப்பாளர் மீது அவதூறு வழக்கு! திமுக ந.செ. புகார் மனு நிராகரிப்பு!!!

Published on 23/04/2020 | Edited on 24/04/2020

கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வேலையின்றி வருமானம் இல்லாமல் உணவுக்காக அவதிப்படும் மக்களுக்கு தன்னார்வலர்கள் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த உதவிகளை நேரடியாக செய்யக்கூடாது என்று அரசு சொன்னாலும் பிறகு அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.

 

Case against DMK IT Wing guardian



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட செயலாளரும் பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் பொன்னமராவதி வட்டாட்சியரிடம் 200 நிவாரண பைகளை கொடுத்து ஏழை மக்களுக்கு வழங்க கொடுத்தனர்.
 

nakkheeran app



நிவாரண பொருட்களைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் அடுத்த நாளே நிவாரணம் வழங்க அதிமுக மாவட்ட செயலாளரும் வாரியத் தலைவருமான வைரமுத்துவை வைத்து, திமுகவினர் வழங்கிய நிவாரண பைகளை வழங்க வைத்தனர். இதைப் பார்த்த திமுக தொழில்நுட்ப பிரிவினர் குழந்தை பிறப்பும் இன்சியலும் என்றும் பல கருத்துகளை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்திருந்தனர். இதைப்பார்த்த அதிமுகவினர் எதிர் விமர்சனம் செய்தனர். 

 

Case against DMK IT Wing guardian



இந்த நிலையில்தான் திமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் இளையராஜா மீது கே.புதப்பட்டியில் அதிமுகவினர் கொடுத்த புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை தேடி வருகின்றனர். இந்த புகாரையடுத்து எங்க கட்சித் தலைவர்களை பற்றி சமூக வலைதளங்களில் இழிவாக பதிவுகள் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் மீது அரிமளம் காவல்நிலையத்தில் திமுக பேரூர் செயலாளர் நாசர் கொடுத்த புகாரை போலீசார் வாங்கவில்லை. அதனால் காவல் உயர் அதிகாரிகளுக்கு மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.

இது குறித்து மாவட்ட செயலாளர் ரகுபதி எம்எல்ஏ கூறுகையில் "நாங்கள் கொடுத்த நிவாரண பொருட்களை அதிமுகவினர் கொண்டு போய் கொடுப்பது நியாயமா? எங்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் திமுக தலைவர்கள் மிது அவதூறு மீம்ஸ்கள் பதிவிட்டவர்கள் மீது நடடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏனோ? என கேள்வி எழுப்பினார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுவருகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.