Skip to main content

'பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டார்'-விமான போக்குவரத்துத் துறை விளக்கம்

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

'BJP MP Tejashwi Surya has apologised'-Air Transport Department explanation

 

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணம் செய்திருந்தனர். அந்த விமானம் சென்னையில் இருந்து திருச்சி புறப்படும்போது விமானத்தின் அவசர கால கதவு திறந்ததாக தகவல்கள் வெளியாகி சர்ச்சை உருவானது.

 

இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் 'விமானத்தில் அவசர வழி கதவு திறக்கப்பட்ட விவாகரத்தில் தவறுதலாக  கதவு திறக்கப்பட்டதாக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்டு விட்டார்' என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்  ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்