Skip to main content

“யாரு வேணாலும் எதுனாலும் பேசலாம்... எல்லாமே அரசியல்தான்” - அய்யாக்கண்ணு பேட்டி!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

"Anyone can talk about anything ... everything is political" -Ayyakkannu interview

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (19.11.2021) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஆட்சிக்கு வந்ததுமுதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்த அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் 2014ஆம் ஆண்டுமுதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். நாட்டின் விவசாயிகளில் 80 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால்தான் அவர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திவருகிறேன்.

 

விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சரியான விதைகள், உரம், பயிர் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. வேளாண் சட்டங்களை ஆதரித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வேளாண் சட்டங்களின் நலனை ஒருதரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். டெல்லி எல்லையில் கூடியுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

 

"Anyone can talk about anything ... everything is political" -Ayyakkannu interview

 

வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதேபோல் ‘வரப்போகின்ற பஞ்சாப், உ.பி. சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு, அந்த அச்சத்தால் எடுக்கப்பட்ட முடிவு இது’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

 

வேளாண் சட்டம் வாபஸ் குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு நக்கீரன் இணையத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “உண்மையாகவே சந்தோஷம்தான். பலபேர் பல சொல்லலாம், வாபஸ் வாங்கனது எலெக்‌சனுக்காகன்னு சொல்லலாம். ஆனால் எங்களுக்கு இது மனவலிதான். காரணம், வேளாண் சட்டங்கள் இருந்துச்சுன்னா இளைஞர்கள் எல்லாம் ஆண்மை இழந்துவிடுவார்கள். பெண்கள் எல்லாம் கருத்தறிக்க மாட்டார்கள். நான் இப்ப ஐம்பது நாளாக வீட்டுக் காவலில் இருக்கன்.

 

"Anyone can talk about anything ... everything is political" -Ayyakkannu interview

 

வீட்ட சுற்றி போலீஸ் போட்டுருக்காங்க. முதல்ல அது இல்லாம போயிரும். இதுனால விவசாயிகளுக்கு ஃபிரீடம் கிடைக்குது. முப்பத்து ஒன்பது நாள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறோம். இளைஞர் சமுதாயம் அழியாமல் காக்கப்படும் வேளாண் சட்டம் வாபஸ் வாங்குனதுனால. வருங்கால சந்ததிகள் அழிஞ்சிறக் கூடாது,. அதற்காக நாங்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தலுக்காக அறிவிச்சிருக்காங்கன்னு யாரு வேணாலும் எதுனாலும் பேசலாம் அது பற்றிய கவலை எங்களுக்கு இல்லை, எல்லாமே அரசியல்தான். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் இது சேஃப்கார்ட். எங்களுக்கு இந்த வேளாண் சட்டங்கள் இருந்தா எம்எஸ்பி கிடைக்காது.

 

தற்போது சட்டத்தை வாபஸ் வாங்கியதால் அது எங்களுக்கு கிடைக்கும். மேலும் மோடியிடம், கோதவரி மற்றும் காவரி ஆகியவற்றை இணைக்க பணம் ஒதுக்கச் சொல்ல வேண்டும் எனும் கோரிக்கை எனக்குள்ளது. இந்த வாபஸை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பார்ப்பார்கள். எங்களுக்கு இது வருங்கால சந்ததிகளைக் காப்பாற்ற உதவியுள்ளது. நான் இதற்காக 39 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தேன். 50 நாளா வீட்டுக் காவலில் இருக்கன். இன்னைக்கு 3 சட்டங்களும் நூற்றுக்கு நூறு சதவீதம் திரும்பப் பெறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

 

இந்தக் காலகட்டத்தில் இது திரும்பப் பெறப்பட்டதே பெரிய விஷயம்தான். நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துபோனார்கள். சிலரை கார் ஏற்றிக் கொன்றார்கள். மேலும், விவசாயிகளைக் கொல்லாமல் விவசாயிகளையும் காப்பாற்றியிருப்பது போதும். இந்த வெற்றிக்குக் காரணமே ஊடகங்கள்தான். அதே மாதிரி யாருமே எங்களைக் கண்டுக்காமல் இருந்தபோது நக்கீரன் மட்டும்தான் எங்கள் போராட்டங்களைப் பற்றி செய்திகளை வெளியிட்டது” என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.