Skip to main content

காயல்பட்டினத்தைக் கலக்கிய '52 கோடி'

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

பாண்டிய மன்னர்களின் காலத்தில் தென் தமிழகத்தின் கொற்கை புன்னக்காயல் மற்றும் மணப்பாடு துறைமுகங்கள் வழியாக வெளி நாடுகளுக்குப் பண்ட மாற்று வணிகத்தின் மூலம் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டவர்கள் காயலை ஒட்டியுள்ள பகுதியினர். அதன் காரணமாக உருவானது தான் காயல்பட்டினம். பிறகு ஏற்பட்ட காலமாற்றம் காரணமாக அந் நகருக்குள் மும்பையைத் தலைநகராகக் கொண்ட சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை மெஜாரிட்டியான முஸ்லிம் மக்களைக் கொண்ட காயல்பட்டினத்தில் காலூன்றியது!.

நகர மக்கள் தங்கள் சேமிப்புகளை, வர்த்தகப் பரிமாற்றங்களை அந்த வங்கியில் டெபசிட் செய்யத் தொடங்கினார்கள்.

 

 '52 crores' mixed with Gayalbattinam


தொலை தொடர்பு சாதனங்கள் வளர்ந்து விட்ட நிலையில், காலமாறுபாட்டின் காரணமாகவும், மும்பையிலுள்ள தலைமை வங்கி கடந்த 11ம் தேதி K.Y.C. எனப்படும் உன்னுடைய வாடிக்கையாளரை அறிந்து கொள் என்று அதிலடங்கிய 11 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை வங்கியில் செலுத்த வேண்டும். தவறினால் உங்கள் கணக்குகள் முடக்கப்படும் என்ற அறிவிப்பை காயல்பட்டினம் கிளையும் அறிவிக்க, அதன் வாடிக்கையாளர்கள் பதறி விட்டனர்.

 

 '52 crores' mixed with Gayalbattinam

 

காரணம், மற்ற வங்கிகளைப் போலின்றி இந்த வங்கியில் யாரும் கடன் பெறவில்லை. மாறாக நகர மக்களின் சுமார் 52 கோடி மதிப்பிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டது தான் அவர்களைக் கலக்கியெடுத்து விட்டது. அதே சமயம் கடையநல்லூரில் சுமார் 100 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. கூட்டம் கூட்டமாக வங்கிக்குத் திரண்ட காயல்பட்டினத்தின் மக்கள், வங்கியின் திட்டம் தேசிய குடியுரிமை சம்பந்தப்பட்டது என்பதால், பிரச்சினையாகலாம், என் நினைப்பில் தங்களின் பணத்தை, மினிமம் பேலன்ஸை மட்டும் வைத்து விட்டு மீதப் பணத்தை எடுக்கத் தொடங்கினர்.

கடந்த நான்கு தினங்களில் மட்டும் சுமார் 6 கோடி வரை வெளியேற, பதறிய வங்கியின் தென் மண்டல அதிகாரி ஸ்பாட்டுக்கு வந்து ஜமாத்தார்களிடம் விளக்கமளித்து, பயம் வேண்டாம் என்று சொன்னதையடுத்து பதட்டம் தணிந்தது.

இது குறித்து வங்கியின் மேலாளரான மாரியப்பனிடம் பேசியதில் ஆரம்ப காலங்களில் ரேசன் கார்டுகள் அடிப்படையில் வங்கிக் கணக்கை துவங்கினார்கள். தற்போது அது எடுக்கப்பட்டு கே.ஒய்.சி. எனப்படுகிற 11 ஆவணங்களில் குறிப்பாக ஆதார், பான்கார்டு போன்றவைகளில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்தால் போதும் என்று தான் அறிவித்தோம். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுறுத்தல்கள் இதர வங்கிகளுக்கும் வந்துள்ளன. இதைக் கொண்டு பதட்டப்படத் தேவை இல்லை என்று அறிவித்து விட்டோம் என்றார்.

ஆறின பால் என்ற நம்பிக்கையில், சூடான பாலில் உதடுகளைப் பதித்த நிலை தான் அங்கே!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.