Skip to main content

கேரளாவுக்கு கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

13 tons of ration rice tried  to Kerala seized!

 

திண்டுக்கல்லில் கடத்த திட்டமிடப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள கலிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கலைமகள் காலனியில் லாரி மற்றும் ஆம்னி வேன்கள், பிக்கப் வேன், டாடா ஏசி, ஆகிய வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி கொண்டுவரப்பட்டு அங்குள்ள துரைராஜ் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். நேற்று ரோந்து பணிக்கு சென்ற சின்னாளபட்டி சார்பு ஆய்வாளர் கோமதி மற்றும் காவலர் ஸ்டாலின் ஆகியோர் லாரி மற்றும் வேன்கள் இருப்பதைப் பார்த்து அருகே சென்று ஆய்வு செய்தனர்.

 

13 tons of ration rice tried  to Kerala seized!

 

அப்போது அவர்கள் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்ல இருப்பதைக் கண்டுபிடித்தனர். உடனடியாக ரேஷன் அரிசி கடத்திய சின்னாளபட்டி பாரதி நகரைச் சேர்ந்த பெத்தனன் மகன் சதீஷ்குமார் மற்றும் லோடு மேன்கள் விஜி.சிங்கராஜ், மாரிமுத்து, ராஜா ஆகிய நால்வரையும் கைது செய்து சின்னாளபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து ரேஷன் அரிசியை ஏற்றி வந்த டாடா ஏசி வண்டி, ஒரு லாரி, மூன்று ஆம்னி வேன், ஒரு பிக்கப் வேன் உட்பட 6 வாகனங்களையும் குற்றவாளிகளையும் குடிமைப்பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 

13 டன் ரேஷன் அரிசி கடத்தியது பிடிபட்டது குறித்து தகவல் தெரிந்தவுடன் மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் எம்.பாஸ்கரன், தலைமையில் மதுரை சரக துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், திண்டுக்கல் அலகு காவல் ஆய்வாளர் கீதா, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார், பனையராஜா, தலைமைக் காவலர் உதயசூரியன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வீட்டை பார்வையிட்டு அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை செய்தனர். சின்னாளபட்டி பகுதியில் 6 வாகனங்களுடன் 13 டன் ரேஷன் அரிசி கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.