Skip to main content

அழகிரியின் கோரிக்கைக்கு எதிர்ப்பு! ராகுலுக்கு பறந்த ஹோட்டல் ரகசியம்!  

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

Tamilnadu congress meeting issue

 

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்திருக்கிறார். கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் சத்திய மூர்த்திபவனில் ஆலோசனை நடத்தினார் தினேஷ் குண்டுராவ். கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத் மற்றும் ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சிதம்பரத்தை அவரது வீட்டுக்கே சென்று சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து வந்தார் தினேஷ் குண்டுராவ்.

 

ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய பிரச்சனையாக மாவட்ட தலைவர்கள் மாற்றம், மாநில நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் பல மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்றும், தற்போதைய மாவட்ட தலைவர்கள் பலரையும் மாற்றி விட்டு புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க வலியுறுத்தியும் ஒரு பட்டியலை தினேஷிடம் தந்திருக்கிறார் அழகிரி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சஞ்சய்தத், தற்போதைய மாவட்ட தலைவர்கள் யாரையும் மாற்றக்கூடாது. புதிதாக மாவட்டங்களை உருவாக்கவும் தேவையில்லை. காலியாக உள்ள மாவட்டத்துக்கு வேண்டுமானால் புதிய தலைவரை நியமிக்கலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், மாநில நிர்வாகிகள் நியமன விசயத்தில் நீங்கள் கொடுத்த பட்டியலும் இருக்கட்டும்; மற்றவர்களிடமும் பட்டியல் வாங்கி கலந்து நியமனம் செய்யலாம் என்றும் சஞ்சய்தத் சொல்லியிருக்கிறார். இதனால் அழகிரிக்கும் சஞ்சய்தத்துக்கும் இந்த விவகாரங்களில் மோதல் வெடித்திருக்கிறது. 
                  

Tamilnadu congress meeting issue

 

சென்னை வந்துள்ள தினேஷ் குண்டுராவுக்கு அண்ணாசாலை அருகே உள்ள தாஜ் ஹோட்டலில் ஒரு ஷூட் புக் பண்ணப்பட்டிருக்கிறது. தவிர மேலும் 4 அறைகளும் புக் செய்துள்ளது காங்கிரஸ் தலைமை.  கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் இதற்கு செலவாகும் என்கின்றனர் சத்தியமூர்த்திபவன் கதர்சட்டையினர், ராகுல்காந்தி சென்னைக்கு வந்த போதே லீ மெரிடீயனில் அவருக்காக ஒரே ஒரு ஷூட் தான் புக் பண்ணப்பட்டது. அதேபோல மேலிட பொறுப்பாளர்கள் யார் வந்தாலும் ஒரு அறைதான் வாடகைக்கு எடுப்பார்கள். இப்போது மட்டும் எதற்காக 5 அறைகள் புக் பண்ண வேண்டும் என்று கேள்விகளை எழுப்புகின்றனர். அத்துடன் இந்த விவகாரங்களை உடனே ராகுல்காந்திக்கு மெயில் தட்டிவிட்டிருக்கிறார்கள் ஹோட்டல் ரூம் ரகசியங்களை அறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.