Skip to main content

“அ.தி.மு.க அரசின் மிகப்பெரிய தவறை வாசன் வரவேற்றுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது.” - கே.எஸ்.அழகிரி

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

Congress leader K.S. azhagiri commented on tamilnadu CM edappadi palanisami and

 

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில்  பேரூந்து நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினர் மணிரத்தினம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசுகையில், “உத்தரபிரதேசத்தில் பெண் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தை உத்தரபிரதேச அரசு விபத்து என்கிறது. மோடி அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திருத்தம் வரலாற்றில் மோசமான சட்டம். நாடு  முழுவதும்  சட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர். முதன் முதலில் ஆதார விலையை கொண்டுவந்தது காங்கிரஸ் அரசுதான்.  கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில் கோதுமைக்கு  நிகராக அரிசி விலை நிர்ணயம் செய்தது பா.சிதம்பரம் தான். 

 

 
காங்கிரஸ் அரசு சிறு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறது . பா.ஜ.க. அரசு பெரு விவசாயிகளுக்கும் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது. பொதுத் துறையை  ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான் பா.ஜ.க அரசின் முதல் திட்டம். இதுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலிருந்து ஒரு லட்சம் பேரை வேலையைவிட்டு வெளியேறிவிட்டனர். இந்தியாவில் ஜியோ நிறுவனம் மட்டும்தான் இருக்கும்.  

 

பா.ஜ.க.வின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக ராகுல் காந்தி களப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  144 தடை உத்தரவு மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடையாது. மக்கள் பிரச்சனைகளை பார்க்கவோ, தீர்ப்பதற்கும் செல்லலாம் என்று சட்டத்திலே உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி செலவு மற்றும் நூறு சதவீத லாபம் இது தான் எங்களது கோரிக்கை. 100 நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்ததால் கடந்த 10 ஆண்டுகளில் 15 கோடி பேர் வறுமை கோட்டிலிருந்து மேலே வந்துள்ளனர். ஐ.நா.வே பாராட்டியுள்ளது. 


 
அ.தி.மு.க அரசு மிகப்பெரும் தவறு செய்துள்ளது. அதனை வாசன் வரவேற்றுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. தான் ஒரு விவசாயி எனக்கூறும் எடப்பாடி, எட்டப்பன் போல் தவறு செய்துள்ளார்.” என பேசினார். 

 

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, இளைஞரணி பொதுச்செயலாளர் கமல் மணிரத்தினம், முன்னாள் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.