Skip to main content

“விமர்சனம் செய்தால் நீங்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு நடவடிக்கை இருக்கும்”- ஆளுநர் தமிழிசை

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

"If you criticize, there will be action to the extent that you understand"- Governor Tamilisa

 

இணையத்தில் மோசமாக விமர்சனம் செய்தீர்கள் என்றால் அதற்கான நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

 

புதுச்சேரி அரசு சார்பில் மோடி20 மற்றும் அம்பேத்கரும் மோடியும் ஆகிய புத்தகங்களின் வெளியிட்டு விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். எல்.முருகன் முன்னிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை புத்தகங்களை வெளியிட முதல்வர் ரங்கசாமி பெற்றுக் கொண்டார்.

 

விழாவில் பேசிய தமிழிசை, “புத்தகத்தைப் படிக்காமல் விமர்சிப்பது தவறு. இணையதள விமர்சகர்கள் விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல. தமிழ் மொழி எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் மொழி. ஆனால் அந்த மொழியில் விற்பன்னர்கள் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் இணையதளத்தில் எழுதும் வார்த்தைகளைப் பார்த்தால் பார்க்க முடியாது. அதனால் தான் இணையத்தில் எழுதும் எதிராளி சகோதரர்களைக் கேட்கிறேன் முதலில் இந்த புத்தகத்தைப் படியுங்கள். இதைப் போல் சாதனை செய்த பிரதமர் இருக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள். 

 

ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அதிலும் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள். நான் மறுபடியும் சொல்கிறேன். இணையதளத்தில் நீங்கள் மோசமாக விமர்சனம் செய்தீர்கள் என்றால் அதன் பின்பு நீங்களும் எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு நடவடிக்கை இருக்கும்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.