Skip to main content

8ஆம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்... தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

Published on 06/08/2020 | Edited on 06/08/2020

 

erode

 

ஈரோட்டில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அதன் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி., மாநிலச் செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். எச்.எம்.எஸ்., சண்முகம், சி.ஐ.டி.யு., ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

பிறகு இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 

 

"போக்குவரத்து, மின்சாரம், வங்கிகள், இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, ரயில்வே என மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிபந்தனையின்றி கெரோனா நிவாரணம் வழங்க வேண்டும்.

 

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இலவச உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். இயற்கை வளங்களை அழிக்கக் கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

 

வரி வருவாய் செலுத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டாத குடும்பங்களுக்கு இந்த கரோனா பொதுமுடக்க காலமான ஆறு மாதத்துக்கும் தலா, ரூபாய் 7,500 வீதம் வழங்க வேண்டும். ஊழியர்களின் அகவிலைப்படி, லீவு சரண்டர் போன்றவைகளை ரத்து செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

 

அதே போல் இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி., – சி.ஐ.டி.யு., – எச்.எம்.எஸ்., – ஐ.என்.டி.யு.சி., – எல்.பி.எப்., உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளார்கள். ஈரோடு மாவட்டத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பதில் சொல்லுங்க சார்...'- தேர்தல் பறக்கும் படையினரிடம் இரவில் வாக்குவாதம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'Answer me sir...'-Argument at night with election flying soldiers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மறுபுறம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் சுவர் விளம்பரங்கள் மறைக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு சரியான ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம் மட்டும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் 47 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த நிலையில் பணத்தை கொண்டு வந்த நபர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோம்புபள்ளத்தில் காரில் சென்றவர்களிடம் தாசில்தார் மாரிமுத்து தலைமையிலான பறக்கும் படை குழுவினர் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த 47 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். 50,000 ரூபாய் வரை மருத்துவ செலவுக்காக எடுத்துச் செல்லலாம் எனக்கு கூறப்பட்டிருக்கும் நிலையில் 47 ஆயிரம் ரூபாயை நீங்கள் பறிமுதல் செய்துள்ளீர்கள் என அதிகாரிகளுடன் காரில் சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'உங்களுக்கு தேர்தல் பறக்கும் படை வேலை இருக்கிறது என்றால் எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா? ஹாஸ்பிடலுக்கு கட்டுவதற்காக 47 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டுப் போக முடியாதுன்னு சொல்றீங்க. எப்படி சார் எடுத்துட்டு போகாம இருக்கிறது. செய்தியில் சொல்றாங்க 50,000 வரை எடுத்துக்கொண்டு போலாம்னு. அதுவும் ரவுண்டா ஐம்பதாயிரம் கூட இல்லை 47,000 தான் இருந்தது. அந்த ஜி.ஓ வ எங்களுக்கு கொடுங்க. எங்கள் பணத்தை நாங்கள் எலக்சன் முடிஞ்ச பிறகு கூட வாங்கிக்கிறோம்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.