Skip to main content

வன்னியர் மக்களுக்காக எடப்பாடி போட்ட அதிரடி திட்டம்...  உள்ளாட்சி தேர்தல் ரேஸில் முந்தும் எடப்பாடி!  

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

சுதந்திரப் போராட்டத் தியாகியும், உழைப்பாளர் பொதுநலக் கட்சித் தலைவருமான கடலூர் ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் திறந்து, வன்னியர் சமுதாய ஆதரவைப் பெறுவதில் முந்தியிருக்கிறார் எடப்பாடி.

மணிமண்டபம் மற்றும் சிலைத்திறப்பு விழாவில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து 25 ந்தேதி துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் புடைசூழ வந்திருந்தார் முதல்வர் எடப்பாடி. பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி மட்டுமே வந்திருந்தார். அவரை மேடையில் அமரவைத்து, ராமசாமி படையாச்சியாரைப் புகழ்ந்துபேசிய எடப்பாடி, "ராமதாஸ், ஜி.கே.மணி, அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் என்னிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அது பரிசீலனையில் உள்ளது. இந்த சமுதாய மக்களுக்காக அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை செய்துதரும்'' என்று தெம்பாகப் பேசி முடித்தார்.

 

admk



மறுநாள், விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, கள்ளக்குறிச்சியை 34-வது மாவட்டமாக தொடங்கிவைக்கும் விழாவிற்கும் நேரில் வந்திருந்தார் முதல்வர் எடப்பாடி. புதிய மாவட்டம் 13 லட்சத்து 70 ஆயிரத்து 281 பேரை மக்கள் தொகையாகக் கொண்டது. ஐந்து சட்டமன்றத் தொகுதிகள், ஒரு நகராட்சி, 559 ஊராட்சிகள், 9 ஒன்றியங்கள், ஏழு பேரூராட்சிகளை உள்ளடக்கியது என சிலபல புள்ளிவிவரங்களை அடுக்கிவிட்டு, விழுப்புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டக்கல்லூரி கட்ட டத்தைத் திறந்து வைத்துவிட்டு, சென்னைக்கு கிளம்பினார்.

முதல்வரின் இந்த விழாவில் பத்திரிகை, ஊடகத்தினருக்கு நிறைய கெடுபிடிகள் இருந்தன. ஆனால், மா.செ. குமரகுரு மகன் நமச்சிவாயம், அவரது குடும்பத்தினர், பணியாளர்கள் என ஒரு கூட்டமே மேடையை ஆக்கிரமித்திருந்தது. விழா அழைப்பிதழில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரிஷிவந்தியம் கார்த்திகேயன், சங்கராபுரம் உதயசூரியன், கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் அவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. மக்களின் கோரிக்கைகளை மேடையில் எடுத்துச் சொல்லும் வகையில் தி.மு.க. தரப்பு பங்கேற்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் வெளிப்பட்டது.


தனி மாவட்ட கோரிக்கைகளை யாரும் வைக்காமலே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிர்வாக வசதிக்காக கள்ளக் குறிச்சியை புதிய மாவட்ட மாக அறிவித்ததாக அமைச்சர் சண்முகம் மேடையில் பேசியதை, அங்கிருந்தவர்கள் ரசிக்கவில்லை. காரணம், “கடந்த 15 ஆண்டுகளாகவே வணிகர்கள், பொதுநல அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராடிவருவதை நாங்கள் அறிவோம்'' என்கிறார்கள் பொதுமக்கள். புதிய மாவட்டப் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தலை தெம்பாக எதிர்கொள்ளும் எடப்பாடியின் எண்ணம் ஓரளவுக்கு வெற்றி கண்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Details released on Second Phase Election Vote Percentage

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக  79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.