Skip to main content

திமுக, அதிமுகவால் எதுவும் சொல்லமுடியாத கருத்துக்கணிப்பு காரணம் தெரியுமா? 

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

இந்திய முழுவதும் ஏழு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.இதில் மே 19ஆம் தேதியான நேற்றைய தினமோடு அணைத்து கட்ட தேர்தல்களும் முடிவடைந்தது. தேர்தலுக்கு முன்பு கருத்துக்கணிப்பு தெரிவிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு உள்ளதால்,தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு அனுமதி வழங்கியது.இந்த நிலையில் நேற்று மாலை பெரும்பாலான செய்தி சேனல்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டனர்.இதில் பெரும்பாலும் மத்தியில் பாஜக ஆட்சி அமையும் என்றும் மாநிலத்தில் திமுக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

 

dmk



இதனால் இந்த கருத்துக்கணிப்பு முடிவை வரவேற்று இரண்டு கட்சிகளுமே பேசவில்லை.இதற்கு காரணம் என்னவென்று விசாரித்த போது, மாநிலத்தில் திமுகவுக்கு சாதகமாக அமைந்தாலும் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு இல்லை அதனால் இந்த கருத்துக்கணிப்பை ஆதரித்து பேசினால் அது பாஜகவுக்கு வந்த கருத்துக்கணிப்பு முடிவு உண்மையாகிவிடும் மேலும் காங்கிரஸ் கட்சியினர் திமுக மீது அதிருப்தி அடையவும் வாய்ப்பு உள்ளது என்பதால் மே 23க்கு பிறகு மக்களின் தீர்ப்பு தெரிந்து விடும்,  அதனால் இந்த கருத்துக்கணிப்பை பற்றி ஒன்றும் சொல்லமுடியாது என்று தெரிவித்துவிட்டனர். 

 

 

admk



இதே போல அதிமுகவுக்கு இந்த கருத்துக்கணிப்பில் பெரும் பின்னடைவு என்று வந்துள்ளது அதனால் இந்த கருத்துக்கணிப்பு எல்லாம் பொய் என்று கூறினால் மத்தியில் பாஜகவுக்கு வந்த பெரும்பான்மை கருத்துக்கணிப்பு பொய் என்று அர்த்தமாகிவிடும் அதனால் அவர்களும் இந்த கருத்துக்கணிப்பை பற்றி எதுவும் சொல்லாமல் மே 23க்கு பிறகு பார்க்கலாம் என்று விட்டுவிட்டனர். இன்னும் ஒரு சிலர் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் அதிமுக அரசு தொடர மறைமுக ஆதரவு கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.