Skip to main content

மூத்த தலைவருக்கு நூற்றாண்டு விழா அஞ்சலி... திமுக வேலுவுக்கு எதிராக உருவாக்கப்படும் சர்ச்சை!!

Published on 02/09/2020 | Edited on 02/09/2020
e.v.velu dmk former Minister

 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடக்க கால திமுக முக்கிய பிரமுகர்களுள் ஒருவராக இருந்தவர் முருகையன். திமுக சார்பில் எம்.பி, எம்.எல்.ஏ, திருவண்ணாமலை நகர மன்ற தலைவராக இருந்தவர். கட்சி பதவியிலும் இருந்தவர். அவர் 1920 ஆகஸ்ட் 7ந் தேதி பிறந்தார், 2003 ஜனவரி மாதம் மறைந்தார். அவரின் நெருங்கிய பேரன் முறை உறவினரும், மதிமுகவின் மாநில உயர்நிலை குழு உறுப்பினர் சீனி.கார்த்திகேயன் முயற்சியில், முருகையன் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

 

சில தினங்களுக்கு முன்பு, முருகையன் தகவல் அடங்கிய விக்கிபீடியா தளம், தொடர்பான யூ டியூப் சேனல் போன்றவற்றை திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை தொடங்கி வைக்க அனுமதி வாங்கி அவரது வீட்டிற்கு சீனி கார்த்திகேயன் சென்றுள்ளார். அங்கு முருகையன் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற அனைவரும் செருப்பில்லாமல் அஞ்சலி செலுத்தினர். 

 

வேலு மட்டும் ட்ராக் பேண்ட், டிசர்ட், வாக்கிங் சூ அணிந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வளைத்தளங்கில் வெளியாகி, மூத்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தி இப்படியொரு அவமரியாதை செய்துவிட்டாரே என சில திமுகவினரே நொந்து கொண்டனர். 

 

அதேநேரத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் இதனை வைத்து விமர்சிக்கவும் தொடங்கிவிட்டார்கள். வேலுவின் வீட்டில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அவர் தனது காலணியை கழட்டி வைத்துவிட்டாவது படத்திறப்பு செய்துயிருக்கலாம் இப்படி எதுவுமே செய்யவில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா அவர் திமுக தலைவர்களுக்கு தரும் மரியாதை என கேள்வி எழுப்புகிறார்கள்.

 

இது தொடர்பாக காரசாரமாக நடக்கும் முகநூல் விவாதம் ஒன்றில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மதிமுக சீனி கார்த்திகேயன் தனது கருத்தாக, படத்திறப்பு விழா என்பதே அந்த நிகழ்வில் கிடையாது, அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வது, மறைந்த முருகையன் மீது பெரும் மதிப்பு வைத்து நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்த ஆலோசனைகள் தந்துள்ளார் என கருத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, நகரத்தில் வலிமையாக உள்ள சமுதாயத்தை மோசமாக பேசிவிட்டார் என தகவல் பரவி, தேர்தல் களத்தில் அவருக்கு பெரும் நெருக்கடியை தந்தது. அதே சமுதாயத்தை சேர்ந்த மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும்போது அவமானப்படுத்திவிட்டார் என்கிற சர்ச்சை தற்போது உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.