Skip to main content

எச்.ராஜாவிற்கு எதிராக ஒன்னு சேர்ந்த திமுக, அதிமுக! அதிருப்தியான எச்.ராஜா!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ளது அரியநாச்சி கிராமம். இக்கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலை சின்னக்கல்பூண்டியான் வகையறாவைச் சேர்ந்தவர்கள் காலம்காலமாக நிர்வகித்து வருகின்றனர். கோவில் கட்டடங்கள் சிதிலமடைந்து உள்ளதால் புதிதாக கோயில் கட்டுவதற்கு முடிவெடுத்தனர். அதற்கு அதே ஊரைச் சேர்ந்த கீழக்கல்பூண்டியான் வகையறா வைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 

bjp


இவ்விரு தரப்பினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தனித்தனி குழுவாகச் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அந்த ஊருக்கு வந்து கோயிலுக்கு அருகிலுள்ள இடத்தில் மாரியம்மன் சிலையை வைத்து கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கினார். அப் போது எதிர்த்தரப்பினர் ஆட்சேபித்ததால் உடனடியாக அங்குசென்ற காவல்துறையினர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் எனக் கூறி ஹெச்.ராஜாவை அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்தித்தனர். இந்நிலையில் இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹெச்.ராஜாவை வரவழைத்து அவர் மூலம் கோயி லுக்கு அருகிலுள்ள மந்தைவெளியில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்போவதாக கூறி அவரை வரவேற்கும் வகையில் சின்னக்கல் பூண்டியான் வகையறா சார்பில் 31-ஆம் தேதி வேப்பூர் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதையடுத்து ஹெச்.ராஜாவின் வருகைக்கு எதிர்ப்புதெரிவித்து அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் மற்றொரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. கடந்த 01-ஆம் தேதி மாலை வேலூரிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துவிட்டுப் போகலாமென வேப்பூர் வந்தார் ஹெச்.ராஜா. ஆனால் ஏற்கனவே கலவரமேகம் சூழ்ந்துள்ள நிலையில் ராஜா வருகையைத் தடுக்க 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது காவல்துறை.

மாலை சுமார் ஆறரை மணியளவில் வேப்பூர் வந்த ஹெச்.ராஜா தனியார் ஹோட்டலில் தங்கினார். ராஜா வந்திருப்பதை அறிந்த கீழக்கல் பூண்டியான் வகையறாவினர் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அவர்களை சமாதானம் செய்த காவல்துறை அதிகாரிகள் ராஜா தங்கியிருந்த ஹோட்ட லுக்கு சென்று தடையுத்தரவையும், நிலைமையையும் எடுத்துச்சொல்ல, அரியநாச்சி செல்லும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார். ஆயிரம் பிரச்சனை, அறிக்கைப் போர் என இருந்தாலும் ஹெச்.ராஜாவை எதிர்ப்பதில் அ.தி.மு.க. -தி.மு.க. கழகங்கள் கைகளை இணைத்துக்கொண்டதை சமூக ஊடகங்கள் சுட்டிக்காட்டி வேடிக்கையான கமெண்ட்களைத் தெரிவித்திருந்தன.

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.