Skip to main content

துணை முதல்வர் பதவி! ஓ.பி.எஸ். - தங்கமணி மோதல்! அதிமுகவில் புதிய குழப்பம்

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

 

அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து விதமான டெல்லி தொடர்புகளுக்கும் உதவியாக இருப்பவர் தங்கமணி. ஓ.பன்னீர்செல்வத்தை மீறி அதானி குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருக்கும் திரிவேணி என்கிற கம்பெனி மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் டெல்லி தொடர்புகளை பெற்றுக்கொடுத்தவர் தங்கமணி. 

 

ops-thangamani-eps



இப்பொழுது ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் மீண்டும் வலுப்பெற்று விட்டார். முத்தலாக் மசோதாவை ஆதரித்து ரவீந்திரநாத் குமார் மக்களவையில் பேசியதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கை மிகவும் ஓங்கிவிட்டது. 
 

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கை பாஜகவில் வலுப்பெற்று வருகிறது. இதை மட்டுப்படுத்த தங்கமணியின் தயவை எடப்பாடி பழனிசாமி நாடியுள்ளார். அதற்கு தங்கமணி ஒரு டிமாண்ட் வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சராக்கியது போல் தன்னையும் துணை முதலமைச்சராக்குங்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் தங்கமணி கோரிக்கை வைத்துள்ளார். 


 

 

ஒரு மாநிலத்தில் இரண்டு துணை முதலமைச்சர்கள் இருக்கலாம். அதற்கு ஏற்கனவே பல முன்னுதாரணங்கள் இருக்கிறது என தங்கமணி கூறியிருக்கிறார். முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வர் துணை முதலமைச்சர், மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவரான தங்கமணி துணை முதலமைச்சர் ஆவதா என அதிமுகவில் இருக்கும் வன்னியர்களான கே.பி.முனுசாமியும், சி.வி.சண்முகமும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 
 

தங்கமணி துணை முதலமைச்சர் பதவி கேட்பது குறித்த செய்திகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக வெளிப்பட்டு வருவது அதிமுகவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கமணி துணை முதலமைச்சர் பதவி கேட்கிறார் என்ற செய்தியை ஓ.பன்னீர்செல்வம்தான் லீக் செய்கிறார் என தங்கமணி தரப்பு ஓ.பன்னீர்செல்வம் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.