Skip to main content

பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய சம்பவம்... சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

மத்திய பா.ஜ.க. அரசுக்கு வெங்காய விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.  சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை ஏகத்துக்கும் ஏறியது. இதனால் வெங்காயம் காட்சிப் பொருளாக மாறி வருவது, மக்கள் மனதில் நெருப்பை அதிகமாகியுள்ளது. வெங்காயத்தை சீரியசாக  எடுத்துக்காததால், மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தையே கடந்த காலங்களில் ஏற்படுத்தியிருக்கு என்று சொல்லப்படுகிறது. இது பற்றியெல்லாம் கவலைப்படாத மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காய விலை ஏற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது, "நான் சாப்பாட்டில் வெங்காயமும் பூண்டும் சேர்த்துக்கிற சமூகத்தில் பிறக்கலை'ன்னு சொல்லி, எல்லாத் தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பை வாங்கிக்கொண்டார்.   

 

onion



மேலும் எதையும் சமாளிக்கிற சூழ்நிலை தெரியவில்லை என்று மக்களும் கவலையில் இருப்பதாக தெரிகிறது.  அதோடு,  ஜி.எஸ்.டி .வரி வசூலிப்பில் கெடுபிடியைக் காட்டிவரும் மோடி அரசு, அதிலிருந்து மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதியை ஒவ்வொரு மாநிலத்திற்கும் செட்டில் பண்ணாமல் கோடிக்கணக்கில் நிலுவையில் வைத்து  இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. தமிழகத்துக்கு கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூபாய் 7,605 கோடியைத் தரவில்லை என்கின்றனர். இதுபோல் மோடி அரசால் நிதி தராமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் மாநிலங்கள், டிசம்பருக்குள் அவற்றை செட்டில் செய்யாவிட்டால், மோடி அரசுக்கு எதிராக உச்ச நீதின்றத்தில் வழக்குத் தொடுக்க அணி திரண்டுள்ளனர். இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் இதுகுறித்து விவாதிக்க, 18-ந் தேதி கூடுகிறது. 
 

 

bjp



இந்தச் சூழலில், நிலைமையை சமாளிக்க, ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று மோடிக்கு இவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். இதில் 5 சதவீத வரிகளுக்கு உட்பட்ட பொருட்களின் வரியை 12 சதவீதத்திற்கும், 12 சதவீத வரிகளுக்கு உட்பட்ட பொருட்களின் வரியை 18 சதவீதத்திற்கும் மாற்றினால்தான் சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர் என்கின்றனர். இதன் அடிப்படையில், ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியே கசிந்ததால், இப்போதே மோடி அரசுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. இதை காங்கிரஸ் ப.சி. உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் கையில் எடுக்கத் தொடங்கி விட்டதாக சொல்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.