Skip to main content

இது இன்னொரு வியாபம்: பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

டெல்லியில் நான்காவது நாளாக பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி தேர்வெழுதியவர்களும் மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

 

ProSSC

 

மத்திய அமைச்சரவை மற்றும் அதன் கீழுள்ள அமைப்புகளுக்கான நான் கெஜட்டட் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தேர்வுக்காக பிப்ரவரி 17 முதல் 21 வரை நான்கு தினங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 9000-க்கும் அதிகமான பணியிடங்களுக்கான பணியாளர்களை இத்தேர்வு மூலம் தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், கேள்வித்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் ஆதாரங்கள் வெளிப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் தேர்வை ரத்துசெய்யக் கோரியும், சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டுமெனவும் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். மாணவர்களின் கிளர்ச்சியை அடுத்து, 21-ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுமென ஆணையம் அறிவித்தது.

 

இந்நிலையில் காங்கிரஸின் செய்தித் தொடர்பு பொறுப்பாளரான ரந்தீப் சுர்ஜீவாலா, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதோடு சி.பி.ஐ. விசாரணைக்கும் பா.ஜ. அரசு உத்தரவிடவேண்டுமென தெரிவித்தார். மேலும் பா.ஜ.க. அரசின் மற்றுமொரு வியாபம் ஊழல் என இதைக் குறிப்பிட்ட அவர், பா.ஜ.க. அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டுமே தவிர, வேலைகளை விற்பனை செய்யக்கூடாதெனவும் விமர்சித்தார்.

 

மாணவர்களின் போராட்டத்தில் இன்று காலை அண்ணா ஹசாரேவும் கலந்துகொண்டதோடு, சி.பி.ஐ. விசாரணை தேவை என குரல்கொடுத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.