Skip to main content

“முயற்சிகள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது” - டி.ஆர். பாலு வேதனை 

Published on 26/02/2023 | Edited on 26/02/2023

 

“All efforts have been blacked out”  T.R.Balu pain

 

தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்வதற்காக திமுக மேற்கொண்ட முயற்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. இது சென்னையில் இருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் சென்றுவிடும். 

 

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் இந்த ரயில் திருச்சியில் மட்டுமே நின்று செல்லும். சென்னையில் இருந்து புறநகர் வழியே திருச்சியை நோக்கிச் செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்திலும் நின்று செல்ல வேண்டும் என சென்னைவாசிகள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்தனர்.  திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, எம்.பி சு.வெங்கடேசன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டவர்கள் இது குறித்து ரயில்வே துறையிடம் கோரிக்கையை அளித்திருந்தனர். 

 

இந்நிலையில் அனைவரின் வேண்டுகோலையும் ஏற்ற ரயில்வே துறை இன்றில் இருந்து (26-02-23) தேஜஸ் ரயில் தாம்பரத்திலும் நின்று செல்லும் என அறிவித்தது. அதன்படி, தேஜஸ் ரயில் சென்னையில் இருந்து புறப்பட்டு தாம்பரத்தில் நின்று சென்றது. அதை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். 

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, “நான் எம்.பி.யாக ஜூன் 18 பதவி ஏற்றது . மே 30 ஆம் தேதி இது குறித்தான கடிதத்தை சேர்மனிடம் கொடுத்தேன். தேஜஸ் ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்துவது தொடர்பாக திமுக எம்.பிக்களின் முயற்சி இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. இந்த நிகழ்ச்சி குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. நாங்கள் இருந்த இருக்கைகளுக்கு பின்னால் எங்கள் பெயர்கள் தெரியாத அளவிற்கு வடிவமைத்துள்ளனர். இந்த இருக்கைகள் மறைக்கும் அளவிற்கு எங்களது பெயர்களை எழுதி வைத்துள்ளார்கள்” எனக் கூறினார்.

 

முன்னதாக ரயில் புறப்படும் முன் கொடி அசைத்து அதை துவக்கி வைக்க, திமுக எம்.பி. பாலுவிடம் கொடி கொடுக்கப்பட்டது. ஆனால், தனது எதிர்ப்பினை பதிவு செய்யும் விதமாக அவர் அதை வாங்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.