Skip to main content

“என் காருக்கு அட்வான்ஸா ரூ.100 கொடுத்தார்; அதன்பின் அதை மறந்துட்டார்” - நினைவுகளை பகிர்ந்த முதல்வர்

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

“Advance paid Rs 100 for my car; After that he forgot about it,” shared the memories of the Chief Minister

 

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு எழுதிய பாதை மாறா பயணம் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

 

இந்நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பாலு கலைஞருக்கு அப்போது கார் ஓட்டிக்கொண்டு இருந்தார். கார் ஓட்டிக் கொண்டிருந்த பாலுவையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பிப்ரவரி ஒன்றாம் தேதி நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பாலு கைதானது மே மாதம் ஆறாம் தேதி. நாங்கள் அடிபட்டு, ரத்தம் சிந்தி, மிதிபட்டு பல கொடுமைகளைச் சந்தித்தோம். இனி யாரையும் அடிக்கப் போவதில்லை எனக் காவலர்கள் முடிவெடுத்த பிறகு தான் பாலு சிறைக்கு வந்தார். பாலு சிறைக்கு வரப்போகிற தகவல் எங்களுக்கு கிடைத்துவிட்டது. வரப்போகும் பாலுவை நாங்கள் எப்படி வரவேற்பது என்று திட்டம் போட்டோம். 

 

சிறையில் மரத்தில் இருந்த இலைகளை எல்லாம் பறித்து அந்த இலைகளை ஒரு நாறில் கட்டி எல்லாரும் சேர்ந்து பாலுவை வருக வருக என வரவேற்று மாலை போட்டு உள்ளே அழைத்தோம். எங்களுக்கு சிறை பழகிவிட்டது. ராயப்பேட்டையில் நாங்கள் எப்படி இருந்தோமோ அதே போல தான் சிறையிலும் நாங்கள் ஒன்றாக இருந்தோம். சிறையில் நாங்கள் அண்ணா, கலைஞர் போன்றோரின் பிறந்தநாள், முப்பெரும் விழா போன்ற தினங்களில் விழாக்களை நடத்தினோம் பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டி எல்லாம் நடத்தினோம்.

 

நான் கட்சிக் கூட்டத்திற்கு செல்லும் பொழுது எனக்கு துணையாக பாலுவைத்தான் அழைத்துக் கொண்டு செல்வேன். அந்தக் கூட்டத்தில் எனக்கு வழிச்செலவிற்கு பணம் கொடுப்பார்கள். அதில் பாதி நான் பாலுவிற்கு கொடுத்து விடுவேன். 5000 ரூபாய்க்கு கார் ஒன்றை வாங்கினேன். சிறிது தினங்களில் விபத்து நடந்து விட்டது. ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி 7 ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்தேன். விபத்து ஏற்பட்டவுடன் வண்டியை விற்று விடலாம் என்று முடிவு செய்த போது அதை நான் வாங்கிக் கொள்கிறேன் என பாலு கேட்டார். எவ்வளவு கொடுக்க வேண்டும் எனக் கேட்டார். அதற்கு நான், வாங்கியது ஐந்தாயிரம் செலவு செய்தது 7 ஆயிரம் மொத்தம் 12000 போதும் என்று கேட்டேன். 

 

உடனே அதை ஏற்றுக்கொண்டு 100 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். அதன் பிறகு சுத்தமாக அதை மறந்துவிட்டார். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்தார். மொத்தத்தில் பாலு இதுவரை 2000 ரூபாய் தான் கொடுத்திருப்பார். ஆக, இன்று வரை அவர் என் கடன்காரராகத் தான் இருக்கிறார். இப்படி எங்கள் நட்பு இன்றும் ஒட்டிக்கொண்டு உள்ளது. இது தான் திமுக” எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.