Skip to main content

மேலும் 4 பெண்கள்; வெளிவந்து கொண்டே இருக்கும் பாதிரியாரின் மர்மங்கள்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

4 more women; Mysteries of the priest that keep unfolding

 

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு சூழால் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ. இவர் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் தவறாகப் பேசி நெருங்கிப் பழகியதாகக் கூறி பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. நூற்றுக்கணக்கான பெண்களை இதுபோல திட்டம்போட்டு ஏமாற்றியுள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

 

முதலில் பெண்களிடம் நல்லவர் போல பழகி அறிமுகமாகிக் கொள்ளும் பாதிரியார், நாளடைவில் தனது உண்மையான முகத்தைக் காட்டத் தொடங்கிவிடுவார். மெசேஜில் வசியம் செய்யும் வகையில் பேசி அவர்களை நம்ப வைத்து தன் வலையில் எளிதில் வீழ்த்திவிடும் பாதிரியார்., அவர்களுடன் தனியாக இருப்பதை பத்திரமாக வீடியோவாகவும் ஃபோட்டோவாகவும் எடுத்து வைத்திருந்துள்ளார்.

 

இந்த வகை வீடியோக்கள் வெளியானதும் பாதிரியார் தலைமறைவானார். இதையடுத்து, அவரை தீவிர தேடுதலுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ போலீசில் சிக்கியிருக்கும் நிலையில், அவரது குற்றச்செயல்கள் சங்கிலி தொடா் போல் நீண்டுகொண்டே போவது போலீசாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

சைபா் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, "உண்மையை சொல்ல மறுத்த பாதிரியார்., பெண்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களே விருப்பப்பட்டுத்தான் அப்படி என்னிடம் நடந்து கொண்டார்கள்" எனக் கூறியுள்ளார். போலீசாரின் 9 மணி நேர தீவிர விசாரணையில் இதை மட்டும் தான் கூறியிருக்கிறார். இந்த நிலையில் நாகர்கோவில் ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் நாகர்கோவில் சப்-ஜெயிலில் பாதிரியார் அடைக்கப்பட்டுள்ளாா். 

 

இது குறித்து நம்மிடம் பேசிய மலங்கரை கத்தோலிக்க சபையை சேர்ந்த மூத்த பாதிரியார் ஒருவர், "பெனிட்டிக் ஆன்டோவை மலங்கரை கத்தோலிக்க சபையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தவுடன் அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து கோட்டயத்தில் இருக்கும் மலங்கரை கத்தோலிக்க தலைமை சபைக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட இளம் பாதிரியார்கள் சென்று இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பெனிட்டிக் ஆன்டோவுடன் சேர்ந்து திருத்தொண்டர் பட்டம் பெற்று பல்வேறு சபையில் பணியில் இருப்பவர்கள். இந்த விசயத்தில் இவா்களுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அவா்களாக முன்வந்து நேரில் விளக்கம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. எனக்கு தெரிந்தளவில் இளம் வயதிலே பாலியல் புகாரில் சிக்கிய முதல் பாதிரியார் இவா்தான். இவரால் ஒட்டு மொத்த மலங்கரை கத்தோலிக்க சபைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. பெனிட்டிக் ஆன்டோவை தற்காலிக நீக்கம் போதாது திருத்தொண்டர் பட்டத்தை திரும்ப பெற்று நிரந்தரமாக நீக்க வேண்டும்" என்றார் மலங்கரை கத்தோலிக்க சபையை சேர்ந்த மூத்த பாதிரியார்.

 

இந்த நிலையில் சைபர் க்ரைம் போலீசாரால் கைப்பற்றப்பட்டு இருக்கும் பாதிரியாருடைய 3 செல்போன்களில், ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பில் 30 பாதிரியார்களும் 13 பெண்களின் பெயர்களும் இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. இந்த பெண்கள் யார் யார் என்ற விசாரணையும் தீவிரமாகியிருக்கிறது. அந்த க்ரூப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை தவிர வேறு எதுவும் பகிரப்படவில்லையாம். 

 

இந்த நிலையில் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த பிரபல பெண் மருத்துவா் ஒருவர் பாதிரியார் பணிபுரிந்த சபைகளுக்கு அடிக்கடி வந்துள்ளார். அந்த பெண் மருத்துவர் இன்னொரு கிறிஸ்தவ பிரிவை சோ்ந்தவர். இந்த மருத்துவர், பாதிரியாரால் பாதிக்கப்பட்டு கருவுற்ற பெண்களின் கருவை கலைக்க உடந்தையாக இருந்திருப்பார் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதற்கும் போலீஸ் விசாரணையில் முடிவு தெரிந்துவிடும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

 

இந்நிலையில் பாதிரியார் மீது மேலும் 4 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து சைபர் கிரம் காவல்துறையினர் பாதிரியாரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியாரிடம் விசாரணை முடிந்து மீண்டும் அவர் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.