கோரக்பூர் மருத்துவமனையில் 7 மாதத்தில் 1,304 பேர் மரணம்

இந்நிலையில், கோரக்பூர் மருத்துவமனையில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை, 7 மாதகாலத்தில் சுமார் 1,304 பேர் உயிரிழந்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன் தினம் 16 குழந்தைகளும், நேற்று 19 பேரும் கோரக்பூர் மருத்துவமனையில் வெவ்வேறு காரணங்களால் மரணமைடைந்தனர் என அம்மருத்துவமனை முதல்வர் பி.கே.சிங் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது மருத்துவர்கள் மீது போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் 7 பேருக்கு கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. மேலும், முன்னாள் மருத்துவமனை முதல்வர் மற்றும் அவர் மனைவியை போலீசார் 14 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.