Skip to main content

"மோடி அரசு பின்வாங்கும் வரை போராட்டம்" - மெகா பேரணியை அறிவித்த காங்கிரஸ்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

rahul gandhi

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி விலை உயர்வு மற்றும் பண வீக்கத்துக்கு எதிராக டெல்லியில் மாபெரும் பேரணியை அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; மோடியும் பணவீக்கமும் மக்களின் வாழ்க்கையில் சாபமாகிவிட்டனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வருமானத்தையும், பட்ஜெட்டையும் அழித்துவிட்டது.
 

பாரதிய ஜனதா அரசால் உந்தப்படும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தால் இந்திய மக்கள் தாங்க முடியாத கொடுமையையும் சொல்லொணாத் துயரத்தையும் அனுபவித்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்ச ஊட்டச்சத்துக்கு கூட பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் அன்றாட உணவுப் பொருட்களையும் மற்ற நுகர்பொருட்களையும் வாங்குவதற்கும் உட்கொள்வதற்கும் சிரமப்படுகிறார்கள். இந்த தீர்க்கமுடியாத வலியையும் மற்றும் மக்களின் துன்பத்தையும் மோடி அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப மின்னணு ஊடகங்களின் ஒரு பிரிவின் ஆதரவுடன், மத ரீதியாக பிளவுபடுத்தும் பிரசங்கங்களை வழங்குவதும், திசை திருப்பும் அறிக்கைகளை வழங்குவதுமே மோடி அரசின் ஒரே தீர்வாக இருக்கிறது.

 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் கடுமையான விலைகள், அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் பிற நுகர்வுப் பொருட்களின் விலையில் சுழல் விளைவைக் கொண்டுள்ளது. சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எல்லாமே படிப்படியாக சாமானியர்களின் கைக்கு எட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது. மோடி அரசு சாதாரண இந்தியரின் துயரங்கள் மற்றும் வேதனைகள் குறித்து அலட்சியமாக உள்ளது அல்லது மற்ற சந்தர்ப்பங்களில் கேலி செய்கிறது.

 

காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் டிசம்பர் 12 ஆம் தேதி 'மெஹங்காய் ஹடாவோ' பேரணியை நடத்துவதன் மூலம் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் மீது நாட்டின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் இந்திய முழுவதிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இந்த பேரணியில் உரையாற்றுவர். இது தற்போதுள்ள மோடி அரசுக்கு, அதன் கொள்ளையை நிறுத்திக்கொள்ளவும், விலைவாசியை குறைக்கவும் ஒரு தீர்க்கமான எச்சரிக்கையை கொடுக்கும். மோடி அரசு பின்வாங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.