Skip to main content

இந்தியாவில் 100-ஐ நெருங்கும் புதிய வகை கரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

covid 19

 

இங்கிலாந்தில் பரவி வந்த மரபணு மாற்றமடைந்த புதிய வகை கரோனா, மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்கள் சோதனை செய்யப்படுவதன் மூலம், இங்கும் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

 

இந்தியாவில் ஏற்கனவே 82 பேருக்குப் புதியவகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 8 பேருக்குப் புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

 

புதிய வகை கரோனா தொற்று உறுதியானவர்கள், தனி அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்