Skip to main content

மோடி, சீன அதிபர் சந்திப்பின் முழுப் பின்னணி...வெளிவராத அதிர்ச்சி தகவல்! 

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

"இப்படி ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் வந்தால் தமிழகம் சுத்தமாகிவிடும்' என்று நீதிமன்றம் சொல்லக்கூடிய அளவுக்கு, சென்னை டூ மாமல்லபுரத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது சீன அதிபர் ஜி ஜின்பெங்- இந்திய பிரதமர் மோடி விசிட். சீன அதிபருக்காக சென்னை விமான நிலையம், அங்கிருந்து கிண்டி ஐ.டி.சி. ஓட்டல் செல்லும் வழி, அதன் தொடர்ச்சியாக மாமல்லபுரம் வழியிலான ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகள் எல்லாம் பளபளக்க, பல்லவர் கால கலைநகரமான மாமல்லபுரம், நேற்றுதான் வடிவமைக்கப் பட்டதுபோல பாலீஷ் செய்யப்பட்டிருந்தது. ஆச்சரியமூட்டும் அலங்காரத்தை சென்னை வாசிகள் வாய்பிளந்து பார்த்தனர். சாக்கடை அடைத்துக்கொண்டால் கார்ப்பரேஷன் ஆட்கள் வர நாட்கணக்கில் ஆகும் மாநகரத்தில், மேம்பாலத்தின் கீழ் உள்ள சிமெண்ட் தூண்களும் அலங்கார விளக்குகளால் ஜொலித்தன. 10 நொடியில் 100 கி.மீ பயணிக்கும் சீன அதிபரின் கார் வியாழனன்றே வந்திறங்க, ஆச்சரியம் கூடியது.

 

meeting



இந்த ஆச்சரியத்துக்கு நடுவே கெடுபிடிகளுக்கும் அடாவடிகளுக்கும் பஞ்சமில்லை. ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டு, சாஃப்ட்வேர் நிறுவனத்தினர் வீட்டிலிருந்தே வேலை செய்ய பணிக்கப்பட்டனர். சென்னையில் படிக்கும் திபெத் மாணவ-மாணவியர் பாலின வேறுபாடின்றி போலீஸ் கஸ்டடியில் சிக்கித் தவித்தனர். சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் ராமுமணிவண்ணன் வழக்கறிஞர்களோடு நேரில்சென்று போலீசாருடன் வாக்குவாதம் செய்தபிறகு, உத்தரவாதத்துடன் மாணவர்களை விடுவித்தது காவல்துறை. முதல்வரில் தொடங்கி தமிழக அரசின் மொத்த நிர்வாகமும் சீன அதிபர் வருகையில் மட்டுமே முழு கவனம் செலுத்தியது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வருகைக்கும், இந்தியப் பிரதமருடனான சீன அதிபரின் சந்திப்புக்கும் என்ன காரணம், விவாதப் பொருள் என்ன, மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது ஏன் என்பது பற்றி வெளியுறவுத்துறை மூச்சு விடவில்லை.


இது பற்றி விசாரித்தபோது, "இரு வருடங்களுக்கு (2017) முன்பு இந்தியா-சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை குவித்தன. போர் பதட்டம் ஏற்பட்டு, படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், 2018-ல் சீனாவில் உள்ள ஹூபெய் நகரில் ஷி ஜின்பெங்கை சந்தித்து எல்லைக்கோடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார் மோடி. அதில் முழுமையான உடன்பாடு எட்டப்படாத நிலையில் இந்தியாவுக்கு வருமாறு ஜின்பெங்கை அழைத்தார் மோடி. அந்த அழைப்பின்படியே இந்தியா வந்துள்ளார் சீன அதிபர். சந்திப்புக்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்ததும் சீன அதிபர்தான்'' என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.

இந்திய-சீன உறவு குறித்து பல வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்து வரும் தி.மு.க.வின் செய்தித் தொடர்பு செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், "வரலாற்று ரீதியாகப் பார்த்தால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மர் சீனாவின் ஆதர்சபுருஷராக இருக்கிறார். கடந்த 1956-ல் சீனாவின் பிரதமராக இருந்த சூஎன்லாய் இரண்டுநாள் பயணமாக தமிழகம் வந்தவர், மாமல்லபுரத்திற்கும் விசிட் அடித்தார். மாமல்லபுரத்திற்கும் புத்தமதத்திற்குமுள்ள தொடர்புகளை குறிப்பு எடுத்துக்கொண்டவர் சூஎன்லாய். அதன் பாதிப்பில் தற்போதைய சீன அதிபரும் மாமல்லபுரத்தை தேர்வு செய்திருக்கலாம்'' என்கிறார்.

"சமீபகாலமாக தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வரும் பிரதமர் மோடி, அதன் ஒரு முகமாகவே ஜி ஜின்பெங்கின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்'' என்கிறார்கள் டெல்லி தரப்பினர். மேலும் விசாரித்தபோது, ""காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கிய விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு இந்தியாவுக்கு எதிராக இருந்தது. இந்தியாவுக்கு சீன அதிபர் செல்வது உறுதியானதும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அவசரம் அவசரமாக சீனாவுக்கு பறந்தார். இரண்டு நாட்கள் ஜி ஜின்பெங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, ‘ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களின் படியும், இரு நாடுகளுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படியும் காஷ்மீர் விவகாரம் முறையாக தீர்க்கப்படவேண்டும். சூழலை கடினமாக்கும் ஒரு தரப்பு நடவடிக்கையை சீனா எதிர்க்கிறது’ என இந்தியாவுக்கு மெசேஜ் சொன்னது சீனா. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் அதிகார உரிமைகளை பாதுகாக்க சீனா ஆதரவு தெரிவிக்கும் என வெளிப்படையாகவே சொன்னார் ஜி ஜின்பெங். இதனை எதிர்த்து பதிலடி தந்தது இந்திய வெளியுறவுத்துறை. இப்படிப்பட்ட சூழலில்தான் சீனா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மோடி'' என்கிறார்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள்.

இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கிடையேயுள்ள எல்லைக்கோடு தகராறுகள், வர்த்தகத்திலுள்ள முரண்பாடுகள், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
 

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.