Skip to main content

திமுக இளைஞரணியும், மாணவரணியும் இனியும் இணைந்து செயல்படுமா?

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

திமுக இளைஞரணியின் உடனடி போராட்ட நடவடிக்கைகள் திமுகவினரை உற்சாகப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அதைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.


அவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு சட்டநகலைக் கிழித்து கைதானார். மாலையில் விடுவிக்கப்பட்டாலும், இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றபிறகு சிறைப்பட்ட முதல் அனுபவத்தை பெற்றார்

dmk party youngsters team and students team has merge working

பொதுவாக ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர் ஆனபிறகு தமிழகம் முழுவதும் பயணம் செய்து இளைஞரணிக் கிளைகளை தொடங்கினார். ஆனால், 40 வயது வரை மட்டுமே இளைஞரணிப் பொறுப்புக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், திமுக பொருளாளர் ஆன பிறகும் ஸ்டாலின் இளைஞரணிப் பொறுப்பை யாருக்கும் கொடுக்கவில்லை.


ஏனெனில், திமுகவின் அமைப்புக்கு நிகராக இளைஞரணி பலம் பொருந்தியதாக இருந்தது. இளைஞரணி தொடங்கப்பட்ட பிறகுதான் திமுகவில் மாணவரணி பின்னுக்குத் தள்ளப்பட்டது. பொதுவாக, மாணவர்களையும் படித்த இளைஞர்களையும் அடித்தளமாகக் கொண்டே திமுக வளர்ந்தது. கல்லூரிகளில் இருந்தே திமுகவின் பொறுப்பாளர்களில் பலர் உருவானார்கள்.


மாணவர் அணி என்பதை நாற்றங்காலாகவும், இளைஞரணி என்பதை விளைநிலமாகவும் கருதி திமுக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று யோசனைகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த காலங்களில் மாணவர்களை பாதிக்கிற எந்த விஷயத்திற்கும் உடனடியாக களம்கண்டதில்லை.

dmk party youngsters team and students team has merge working

இதற்கு காரணம் இளைஞரணிதான். இளைஞரணிப் பொறுப்பாளராக ஸ்டாலின் இருந்தவரை அவருடைய வயதுக்கு நிகரான இள.புகழேந்தியே மணவர் அணி செயலாளராக நீடித்தார். ஒரு காலத்தில் கல்லூரிகளில் திமுக மாணவர் அமைப்பு பலம் பொருந்தியதாக இருந்தது. மாணவர் பேரவைத் தேர்தல்களில் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. பின்னர் ஒரு கட்டத்தில் திமுகவின் ஆதிக்கத்தை தடுக்கும் நோக்கத்துடன் பேரவைத் தேர்தல்களை அதிமுக அரசு தடை செய்தது.


இந்தக் காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்எப்ஐ அமைப்பு மாணவர்களிடம் ஊடுருவத் தொடங்கியது. பாஜகவின் ஏபிவிபியும் கணிசமான மாணவர்களை ஈர்க்கத் தொடங்கியது. எம்ஜியாருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், ஜெயலலிதா ஆகியோரும் மாணவர் பேரவைத் தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. ஆனால், அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை, மாணவர் அணி ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.


என்னதான் இருந்தாலும், திமுக மாணவர் அமைப்பு செயல்படாத வெறும் பெயருக்கான அமைப்பாகவே தொடர்ந்தது. இந்நிலையில்தான் இளைஞரணிக்கு ஸ்டாலின் தனது மகனை உதயநிதியை செயலாளராக நியமித்தார். உடனே அதுவரை இல்லாத முக்கயத்துவம் இளைஞரணிக்கு கிடைத்தது. கலைஞரின் மகன் என்பதால் எப்படி ஸ்டாலின் தலைமையிலான இளைஞரணிக்கு திமுகவில் முக்கியத்துவம் கிடைத்ததோ, அதே அளவுக்கு உதயநிதி தலைமையிலான இளைஞரணிக்கும் புகழ் வெளிச்சம் கிடைக்கத் தொடங்கியது.

dmk party youngsters team and students team has merge working

உதயநிதி செயலாளர் ஆனதாலோ என்னவோ, திமுகவின் மூத்த தலைவர் மறைந்த சிவிஎம் அண்ணாமலையின் பேரன் சிவிஎம்பி எழிலரசன் மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்டதுடன், ஐஐடி மாணவர் பிரச்சனை உள்ளிட்ட விஷயங்களில் உடனுக்குடன் கண்டன அறிக்கைகள் வெளிவந்தன. சில போராட்டங்களையும் முன்னெடுத்தது. ஆனால், இளைஞரணி அளவுக்கு எழுச்சி இல்லை என்ற குறை இருந்தது.


இந்நிலையில்தான் படிக்கிற காலத்திலிருந்தும் படித்து முடித்த பின்னரும் அரசு வேலை வாய்ப்புக்கு இருந்த ஒரு வாய்ப்பான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக மாணவர் அணியும், இளைஞர் அணியும் இணைந்து போராட்டத்தை நடத்தி இருக்கின்றன. வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.


திமுகவில் இளைஞர்கள் மாணவர்கள் என்பவர்கள், கட்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். கட்சிக்கு அப்பாற்பட்ட இளைஞர்கள் தமிழ்தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்களே ஈர்த்துவிடுகிறார்கள். மாணவப் பருவத்திலிருந்தே தமிழ்மொழிப் பற்று, மாநிலப் பற்று, தமிழகத்தின் தனித்தன்மை ஆகியவற்றை ஊட்டி வளர்க்க வேண்டிய திமுக இனியேனும் மாணவர்களாக இருக்கும்போதே இளைஞர்களை கவரும் வகையில் மாணவர் அணியையும் இளைஞர் அணியையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்று இளைய தலைமுறையினர் எதிர்பார்க்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.