Skip to main content

கட்சியினர் வலியுறுத்தல்... வேலூரில் மீண்டும் ஏ.சி.சண்முகம் போட்டி???

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

 

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வர அவருக்கு ஒரு வாரத்திற்கும் மேலானது. தனக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களிடம் அதிமுக இன்னும் கொஞ்சம் வேலை பார்த்திருக்கலாம் என்று சொல்லி வருகிறாராம்.

 

AC-Shanmugam



இந்த நிலையில் புதிய நீதி கட்சியின் நிர்வாகிகள் ஏ.சி.சண்முகத்தை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என முதலமைச்சசர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. 


 

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் பெற்றீர்கள். இப்ப அந்த ஓட்டுகள் கொஞ்சமும் நமக்கு குறைய வில்லை. ஆகையால் அடுத்த எம்எல்ஏ, எம்பி தேர்தல் வரைக்கும் காத்திருக்க வேண்டாம். உள்ளாட்சித் தேர்தலில் மேயர் வேட்பாளராக களம் இறங்குவோம். அதிமுகவும் இதற்கு ஒப்புக்கொள்ளும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


 

 

அதற்கு ஏ.சி.சண்முகம், நாடாளுமன்றத்திற்கு போவதுதான் எனது விருப்பம். அதோட் இந்த ஆட்சியில உள்ளாட்சித் தேர்தலெல்லாம் நடக்குமா? என்று தெரிவிக்க, எம்பியை விட பவர் புல்லான பதவி மேயர் பதவி. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை வேலூர் மாநாகராட்சி மேயர் பதவியில் இருக்கலாம். உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை என்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் வேலூரில் போட்டியிடுவோம். 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாம் உழைத்த உழைப்பு வீண்போகக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து இதுகுறித்து அதிமுக தலைமையிடம், நீங்களே பேசுங்கள் என்று கூறியிருக்கிறாராம். 

 

 

 

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.