Skip to main content

நீங்களும் சாப்பிடலாம்... கடலிலும் கரைக்கலாம்... அத்தி விநாயகர்... (படங்கள்)

Published on 31/08/2019 | Edited on 31/08/2019



 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN


 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN

 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN




விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை முழுவதும் 2500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி தற்போது விநாயகர் சிலை வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN

 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN


 


சென்னையில் கடந்த 29 வருடமாக விநாயகர் சிலையை வைத்து வரும் குட்டி கணேசனை சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடம், ''29வது வருடமாக இந்த வருடம் விநாயகர் சிலையை தயார் செய்து வைக்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு உணவுப் பொருளைக்கொண்டு செய்வோம். முழுக்க முழுக்க இயற்கை விநாயகர். எந்தவித ரசாயனங்களும் பயன்படுத்தாமல் இந்த சிலையை செய்கிறோம். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தவுடன் இதனை அப்படியே மக்களுக்கு கொடுத்துவிடுவோம். கடலில் கரைத்தாலும் எந்த பாதிப்பும் வராது. கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாக பயன்படும். 

 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN


 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN

 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN



சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் நான், சென்னை நகரத்தில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க தொடங்கியவர்களில் ஒருவன். 1984ல் தொடங்கி இன்று வரை விநாயகர் சிலையை வைத்து வருகிறேன். 1990 வரை மேற்கு மாம்பலத்தில் வைத்து வந்தோம். 91ல் இருந்து தி.நகர் வெங்கட்நாராயணசாலையில் வைத்து வருகிறோம். 91ல் இருந்து நான்கு வருடங்களுக்கு சென்னையிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை வைத்தோம். அதன் உயரம் 40 அடி. அதன் பிறகு பாலங்கள் கட்டப்பட்டது. பாலங்கள் கட்டிய பிறகு அந்த அளவு உயரங்கள் கொண்ட விநாயகர் சிலையை வைக்க முடியவில்லை. அப்போது பழைய மாடல். சிலையாகவே இருக்கும். இப்போதெல்லாம் செல்போனிலேயே போட்டோ எடுக்கிறார்கள். அப்போதெல்லாம் போட்டோ எடுப்பது பெரிய விசயம். ஆகையால் அந்த பழைய மாடல் பிள்ளையார்களை நான் போட்டோ எடுத்து வைக்கவில்லை. ஏதோ என்னிடம் இருக்கும் சில விநாயகர் சிலை போட்டோக்களை தருகிறேன். 

 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN


 

vinayagar chathurthi CHENNAI KUUTEI GANESAN



1995ல் இருந்து ஏதாவது ஒரு உணவுப்பொருளை வைத்து விநாயகர் சிலையை தயார் செய்து வைக்கிறோம். 5008 தேங்காய் பயன்படுத்தி தேங்காய் விநாயகர் சிலை செய்தோம். கல்கண்டு விநாயகர், கொழுக்கட்டை விநாயகர், பேரிச்சம்பழங்களை கொண்டு ஒரு வருடம் சிலை செய்தோம். முழுக்க முழுக்க கடலை மிட்டாய்களை பயன்படுத்தி சிலை செய்தோம். இதேபோல் ஒருவருடம் ஆரஞ்சி மிட்டாய் பயன்படுத்தி சிலை செய்தோம். 700 கிலோ வெல்லம் பயன்படுத்தி சிலை செய்தோம். லட்டு பிள்ளையார் செய்தோம். 25வது வருடத்திற்கு 800 கிலோ மைசூர் பாக்கை தயார் செய்து விநாயகர் சிலை செய்தோம். அங்கேயே மைசூர் பாக்கு சுடசுட போட்டு அந்த சிலையை செய்ய ஆறு நாட்கள் ஆனது. முறுக்கு, தட்டை, அதிர்சம் ஆகியவைகளை பயன்படுத்தி கடந்த வருடம் விநாயகர் செய்தோம். இந்த வருடம் அத்தி விநாயகர் தயார் செய்து வருகிறோம். இதற்காக அத்தி பழம், முந்திரி பருப்பு, ட்ரை அன்னாசி, கிவி, திராட்சை ஆகியவை பயன்படுத்துகிறோம்'' என்றார். 

 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.