Skip to main content

“அப்ரண்டிஸ் எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவை பற்றிப் பேச எந்தத் தகுதியுமில்லை ; அதிமுக ஆட்சியில் மந்திரிகள் கூறு போட்டு கொள்ளை அடித்தனர்..." - குடியாத்தம் குமரன்

Published on 06/12/2022 | Edited on 07/12/2022

 

gh

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் தமிழக அரசின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசி, தமிழகம் இதுவரை கண்டிராத சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்ல ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதாகவும் அது ஒருபோதும் நடக்காது என்றும், அவர்கள் எண்ணம் கனவாகவே போகும் என்று தெரிவித்திருந்தார். இதற்குக் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி முதல்வரின் கருத்தை விமர்சனம் செய்து பேசியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் இருக்கிறார்கள்; ஆனால் முந்தைய அதிமுக ஆட்சி 10 வருடம் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியது என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியில் என்ன மக்கள் விரோத செயல்பாடு நடைபெற்றது என்று கூறியுள்ளார். அப்படி ஏதாவது இவர் ஆட்சியில் நடைபெற்றதைப் போல் நடந்துள்ளதா? இவரின் பத்தாண்டு ஆட்சியில் ஏதோ பாலாறும் தேனாறும் ஓடியதைப் போல் அவர் திமுக ஆட்சியைக் குறைசொல்ல வந்துவிட்டார். இவரின் ஆட்சியில் தமிழகத்தில் நடைபெற்ற அராஜகங்கள் கொஞ்சமா? எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது. எத்தனை பேர் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டார்கள். இவர்களை வரலாறு கூட மன்னிக்காது. குறை கூறும் அளவுக்குத் தமிழக அரசு எந்த வித தவறும் செய்யவில்லை. 

 

இவர் தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியில் தனக்குத் தானே அமர்ந்துகொண்டுள்ளார். புதிய வேலையில் சேரும்போது ஆறு மாதம் அப்ரண்டிஸ் ஆக பணியாற்றுவதைப் போல் இவர் தற்போது ஆறு மாதத்திற்கு அப்ரண்டிஸ் பணிக்கு வந்துள்ளார். ஆறு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அவர் வேலை இல்லாமல் போகப்போகிறார் என்பது மட்டும் நிஜம். இவர் என்னமோ தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ததுபோல் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார். இவரது ஆட்சியில் தங்க வைர மழையைப் பொழிய வைத்ததுபோல் பேசுகிறார். தமிழகத்தை 10 ஆண்டுக் காலத்தில் சீரழித்தவர்கள் இவர்கள். இவர்கள் மற்றவர்களைப் பற்றிப் பேசக்கூடிய தார்மீக தகுதியைக் கூட இழந்துவிட்டார்கள். 

 

இவர்கள் ஆட்சியில் மந்திரிகள் அடித்த கொள்ளைகள் கொஞ்சமா நஞ்சமா, ஆவினில் மட்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1.5 கோடிக்கு சுவீட் சாப்பிட்டுள்ளார். உலகத்திலேயே இந்த அளவுக்கு ஒருத்தர் சுவீட் சாப்பிட்டது இவர் ஒருத்தராகத்தான் இருக்கும். செக் பண்ணி பார்த்தா இவருக்குத்தான் சுகர் லெவல் அதிகமாக இருக்கும். இவர் மட்டுமா கொள்ளை அடித்தார், ஒட்டுமொத்த அமைச்சரவையே கொள்ளை அடிப்பதையே குறியாக வைத்துச் செயல்பட்டனர். முன்னாள் அமைச்சர் குட்கா வழக்கில் அடித்த கொள்ளை உலகத்துக்கே தெரியும். குட்கா விற்கக்கூடாது என்று தமிழகத்தில் அதைத் தடை செய்தவர் ஜெயலலிதா. ஆனால் அவரது அமைச்சர்களே குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்று தமிழகத்தில் அதைக் கடலாகப் பெருக்கெடுக்கவிட்டனர். இதை இல்லை என்று மறுப்பார்களா? இந்த சூழ்நிலையில் அவர்கள் திமுகவை எந்த முகத்தை வைத்துக்கொண்டு குறை சொல்கிறார்கள். 

 

 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.