Skip to main content

பிரபல கன்னட இயக்குநருடன் கைகோர்த்த சந்தானம்

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

Actor Santhanam joins Kannada director Prashanth Raj new movie

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்துவருகிறார், இவர் ‘இனிமே இப்படிதான்’, ‘தில்லுக்கு துட்டு’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டிக்கிலோனா' மற்றும் 'சபாபதி' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனைத்தொடர்ந்து நடிகர் சந்தானம் இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் நாளை (21.1.2022) காலை 10.45 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. 

 

இந்நிலையில் நடிகர் சந்தானம் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'சந்தானம் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகவுள்ளது. கன்னடத் திரையுலகில் பெரும்பாலும் நகைச்சுவை படங்களை இயக்கிவரும் இயக்குநர் பிரசாந்த் ராஜ், தான் இயக்கிய முதல் படமான 'லவ் குரு' படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்