Skip to main content

உலகக்கோப்பையில் விளையாடப்போகும் இந்திய அணியின் 15 வீரர்களின் ஐ.பி.எல் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருந்தது?

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

இங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் இந்த ஆண்டு மே 30-ம் தேதி முதல் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 நாடுகளும் 150 கிரிக்கெட் வீரர்களும் விளையாடவுள்ளனர்.  இதில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்) ஷிக்கர் தவான், விஜய் சங்கர், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஷ்வேந்தர் சாஹல், தினேஷ் கார்த்திக், கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் விளையாடவுள்ளனர்.

 

hardik


இவர்கள் அனைவருமே தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளுக்காக களமிறங்கி தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பின் மூலம் தங்களின் வலிமையையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களின் ஐ.பி.எல் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருந்தது என்பதைப்பற்றி பார்ப்போம்.
 

விராட் கோலி (கேப்டன்): ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக விளையாடிய விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 464 ரன்களை குவித்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 141.46 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் கோலி இரண்டு அரை சதங்களும் ஒரு சதமும் அடித்துள்ளார்.
 

ரோஹித் சர்மா (துணை கேப்டன்): மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய ரோஹித் சர்மா தனது தலைமை பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு கோப்பையை பெற்று தந்துள்ளார். இவர் இந்த தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 128.57 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு 405 ரன்களை எடுத்துள்ளார். இந்த தொடரில் ரோஹித் சர்மா இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

dawan

 

ஷிக்கர் தவான்: டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக விளங்கிய ஷிக்கர் தவான் உலகக்கோப்பையிலும் அணிக்கு வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கலாம். இந்த ஐ.பி.எல். தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய ஷிக்கர் தவான் 521 ரன்களை குவித்துள்ளார். இதில் ஐந்து அரை சதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

விஜய் சங்கர்: ஹைதராபாத் அணியில் மிடில் ஆர்டரில் இறங்கிய விஜய் சங்கர் 15 போட்டிகளில் 244 ரன்களை அடித்துள்ளார். இவர் சராசரியாக 40 முதல் 35 ரன்களை எடுத்துள்ளார். இந்த தொடரில் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 160+ என்பது குறிப்பிடத்தக்கது.

 

dhoni

 

எம்.எஸ்.தோனி: சென்னை அணியின் கேப்டனான தோனி இந்த தொடரில் 15 போட்டிகளில் 416 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 134.63. சென்னை அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார். 7 முறை 30+ ரன்கள் அடித்து சென்னை அணியின் வெற்றிக்கும் வழிவகுத்தார். மேலும் இந்த தொடரில் தோனி மூன்று அரை சதம் அடித்துள்ளார். தோனி அடித்த 111 மீட்டர் இமாலய சிக்ஸரே இந்த தொடரில் மிக உயரமான சிக்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


கேதர் ஜாதவ்: மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 162 ரன்களை எடுத்துள்ளார். சென்னையில் பஞ்சாப் அணியை சென்னை எதிர்கொண்டபோது ஜடேஜா எரிந்த பந்தை தடுக்க முயன்றார். அப்போது அவரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் கேதர் ஜாதவ் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியே.
 

ஹர்திக் பாண்டியா: ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் 191+ ஸ்ட்ரைக் ரேட் கொண்டு 402 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இவர் 14 விக்கெட்களையும் 11 கேட்ச்களையும் பிடித்துள்ளார். குறிப்பாக இந்த தொடரில் 17 பந்துகளில் அரை சதம் அடித்து இந்த தொடரில் குறைந்த பந்துகளில் அதிவேக அரை சதம் அடித்தவர் என்ற இடத்தையும் பிடித்துள்ளார்.
 

முகமது ஷமி: வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி பஞ்சாப் அணிக்காக விளையாடி இந்த தொடரில் 19 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவரது எகனாமிக் ரேட் 8.68.

 

jasprit

 

ஜஸ்ப்ரித் பும்ரா: உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரில் ஒருவரான ஜஸ்ப்ரித் பும்ரா இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் பந்து வீச்சாளரில் மிக முக்கியமானவர். நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய இவர் 19 விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக இவரின் எகனாமிக் ரேட் 6.63 என்பது குறிப்பிடத்தக்கது.
 

புவனேஷ்வர் குமார்: உலகக்கோப்பை தொடரில் அடுத்த முக்கியமான வேகப்பந்து வீச்சாளரில் புவனேஷ்வர் குமார் இருக்கிறார். சன்ரைஸஸ் அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார் இந்த ஐ.பி.எல் தொடரில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதுவே கடந்த 2017-ம் ஆண்டு தொடரில் 26 விக்கெட்களையும் 2016-ம் ஆண்டு தொடரில் 23 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

குல்தீப் யாதவ்: சுழல் பந்து வீச்சீல் மிகமுக்கியமான வீரர் குல்தீப் யாதவ். இவர் இந்த ஐ.பி.எல். தொடரில் 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
 

யுஷ்வேந்தர் சாஹல்: இவர் இந்த ஐ.பி.எல் தொடரில் 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் ஐ.பி.எல். போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய 14 வது வீரர் சாஹல் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினேஷ் கார்த்திக்: தினேஷ் கார்த்திக் 50 பந்துகளில் 97 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அடித்தார். இருந்தபோதிலும் இவர் இந்த தொடரில் எடுத்தது 253 ரன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இரண்டு அரை சதம் அடித்துள்ளார்.
 

கே.எல்.ராகுல்: கே.எல்.ராகுல் இந்த தொடரில் 593 ரன்கள் எடுத்து வார்னருக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். குறிப்பாக இந்த தொடரில் ஆறு அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.
 

ரவீந்திர ஜடேஜா: ஆல் ரவுண்டரான ரவிந்தர் ஜடேஜா இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இருந்தபோதிலும் பந்து வீச்சு பிரிவில் இவரின் பங்கு அதிகம். இந்த தொடரில் மொத்தம் 15 விக்கெட்களை எடுத்துள்ளார். குறிப்பாக இவரின் எகானமி ரேட் இவரின் பலத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஐ.பி.எல். தொடரில் 6.35 எகானமி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.