Skip to main content

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு – உண்மை நிலவரம் என்ன?

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

 

 

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 7 பேர் இறந்திருப்பதாகவும், திங்கள் கிழமை நிலவரப்படி 738 பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கொரியா தமிழ்ச்சங்க தலைவர் ராமசுந்தரம் தெரிவித்தார்.

 

கொரியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் ராமசுந்தரத்துடன் தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம். அவற்றுக்கு  அவர் அளித்த பதில்கள் கொரியாவில் வாழும் இந்தியர்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் வாழும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறோம்.

 

corona


 

 

கேள்வி - தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கிறது? எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்?

 

பதில் - கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 36 பேர் என்றுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேகு என்ற பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடந்த ஒரு மரணநிகழ்வுக்கு பிறகு இந்த பாதிப்பு வேகமாகியது. இன்று திங்கள்கிழமை கணக்குப்படி 738 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

 

 

கேள்வி - இந்தியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? அவர்களில் பலர் பீதியில் தென் கொரியாவை விட்டு இந்தியாவுக்கு திரும்புவதாக கூறப்படுவது உண்மையா?

 

பதில் - இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில்தான் நோய்த் தொற்று பரவுவதால் பயம் அதிகரித்திருக்கிறது. எனவே, இந்த காலகட்டத்தில் இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தவர்கள் சற்று முன்கூட்டியே இந்தியா திரும்புகிறார்கள். ஆனாலும் அப்படி திரும்புகிறவர்கள் எண்ணிக்கை இதுவரை 50க்கும் கீழ்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

 

 

கேள்வி - தென் கொரியா அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறதா? பீதியை போக்கும் வகையில் செயல்படுகிறதா?

 

பதில் - தென் கொரியா அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கிறது. நோய்த் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டால், அந்த பகுதியை உடனடியாக தனிமைப்படுத்துகிறார்கள். தேவையான தூய்மை நடவடிக்கைகளை எடுத்த பிறகே மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்கிறார்கள். வேலை நேரத்திலும் சாதாரண சமயங்களிலும் முகமூடி அணிந்தே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இந்திய தூதரகமும் அவ்வப்போதைய நிலைமையை அறிவிக்கிறது. கொரியாவைப் பொருத்தமட்டில் கொரியர்கள் இயல்பாகவே இருக்கிறார்கள். இதுவரை 7 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் 5 பேர் தேகு பகுதியில் உள்ள புதிய உலகம் என்ற தேவாலயத்தில் நடைபெற்ற மரண நிகழ்வில் பங்கேற்றவர்கள்.

 

இவ்வாறு ராமசுந்தரம் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ. 62 லட்சம் போனஸ்; ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த நிறுவனம்!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Rs.62 lakh bonus for having a child in private company at south korea

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது தென் கொரியா. சிறிய அளவில் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி. இந்த நாட்டின் அண்டை நாடான வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை வீசி அச்சுறுத்தி வருகிறது. ஒரு பக்கம் இப்படியொரு பிரச்சனை என்றால், மறுபக்கம் தென்கொரியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, முன்னெப்போதும் இல்லாத அளவு பிறப்பு விகிதம் சரிந்து இருப்பதே ஆகும். 

கடந்த ஆண்டு தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘2022 ஆம் ஆண்டு சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4 சதவீதம் குறைவு ஆகும்’ என்று தெரிவித்திருந்தது.

திருமணங்கள் குறைந்து கொண்டே வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக அந்த நாடு வருத்தம் கொள்கிறது. வேலைப் பளு உள்ளிட்ட பல காரணங்களால் தென் கொரிய இளம் தலைமுறையினர், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு விழிப்புணர்வுகளையும் தென்கொரியா அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, ‘குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாகத் தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு ரூ. 62.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது கொடுக்கப்படும். ஆண், பெண் என இருவருக்குமே இந்த சலுகை கிடைக்கும். நமது நிறுவனத்தின் இந்த முயற்சி குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, நாட்டின் எதிர்கால பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அமையும்’ என்று கூறியுள்ளது. 

பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” - வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
North Korea's warning on We will destroy countries that provoke South Korea

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.  ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம் ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.

இதற்கிடையே, வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக, சில தினங்களுக்கு முன் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியது. வடகொரியா வீசிய 200க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன்பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல் பகுதியில் விழுந்தன. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், உக்ரைன் மீதான தாக்குதலில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. மேலும், அமெரிக்கா - தென் கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற சக்தி வாய்ந்த ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால், வடகொரியா அதிபர், தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், “தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.