Skip to main content

சிரியாவில் விமானப் படை தாக்குதலில், 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
சிரியாவில் விமானப் படை தாக்குதலில், 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில், தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடங்கள் மீது அரசுப் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாகினர். சிரியாவில் நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்