அ.தி.மு.க. மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஒரு புதிய வழக்குடன் தி.மு.க. அரசு களத்தில் குதித்துள்ளது. அ.தி.மு.க. அரசின் ஊழல் வழக்குகளை தி.மு.க. சரியாக கையாளவில்லை என்ற புகார்கள் உடன்பிறப்புகள் மத்தியிலேயே பரவலாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. அதில் ஒரு திருப்பமாக, வேலுமணி மீது சென்னை மாநகராட்சியில் டெண்டர்கள் வழங்கப்பட்டதில் ஊழல் என ஒரு புதிய வழக்கை தி.மு.க. அரசு தொடர்ந்துள்ளது.

velumani

கடந்த 17ந் தேதி வி.பாஸ்கரன் என்கிற லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளார். 2019ஆம் ஆண்டு சென்னை மாநகரில் மழைநீர் வடிகால்கள் கட்டுதல், சாலை சீரமைத்தல், நடைபாதைகளை சரிசெய்தல் ஆகிய மூன்று வேலைகளுக்காக சென்னை மாநகராட்சி 290 கோடி ரூபாய்க்கு 14 பேக்கேஜ்களாக டெண்டர் அறிவிப்பு வெளி யிட்டது. இதில் விலைப்பட்டியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டியல் ஆகிய விவரங்கள் இடம்பெற்றன. ஆனால் இவற்றை முறையாகச் செய்யவில்லை. மார்க்கெட் விலையை விட மிகஅதிகமான விலைக்கு ரெடிமிக்ஸ் கான்கிரீட் எனப்படும் சிமெண்ட் கலவை பெறப்பட்டு திட்டத்தில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பங்கு பெறும் ஒப்பந்ததாரர்களை வேலுமணியும் அவரது பினாமியான கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான சந்திரசேகரும் சேர்ந்து வேலுமணியின் வீட்டில் சதித் திட்டம் தீட்டி தேர்வு செய்துள்ளனர்.

டெண்டர் விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன என அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராம் வெங்கடேஷ் என்பவர் புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரித்து, அதில் உண்மை இருக்கிறது என கண்டறிந்து, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளது.

Advertisment

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் இடம்பெற்று அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த செக்ஷன்களான 120 பி சதித்திட்டம், 420 ஏமாற்றுதல், மற்றும் 13/2, 13/1 ஏ, ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இது மிகவும் சீரியஸான வழக்கு. இதில் வேலுமணி சந்திரசேகர் மற்றும் புகழேந்தி, நந்தகுமார் உட்பட 11 மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட் விலையை விட அதிக விலைக்கு டெண்டர் நடைமுறையை மீறி ஒப்பந்தக்காரர்களிடம் பொருட்களை வாங்கியிருக்கிறார்கள் என தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் தண்டனை பெறாமல் தப்பிப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

vvஏற்கனவே அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ், அன்பழகன், கரூர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

அந்த சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள செக்ஷன்கள் அனைத்தும் இந்த டெண்டர் முறை கேடு வழக்கிலும் வருகிறது. இது அ.தி.மு.க.வில் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க., அ.தி.மு.க. மீதான தனது தாக்குதலை கூர்மைப்படுத்தியுள்ளது. இந்த வழக்கைப்போல அ.தி.மு.க. அமைச்சர்கள் பலபேர் மீது ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டு அவை லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் இருக்கிறது.

தங்கமணி மீது வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் செய்தார் என பெரிய புகார் உள்ளது. ஒவ்வொரு அமைச்சரும் அவரவர் துறையில் முறைகேடுகள் செய்தார்கள். கொரோனா காலகட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடு செய்தார் என ஒரு புகார் உள்ளது.

அந்த புகார்களையெல்லாம் இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது வேலுமணி மீது, அவரது துறைரீதியான நடவடிக்கைகள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், மற்ற அமைச்சர்கள் மீது இதுபோல ஊழல் வழக்கு அவர்களது துறை ரீதியான நடவடிக்கைகளின் அடிப்படையில் தொடரப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது கொடநாடு கொலை வழக்கு, இன்றும் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருக்கிறது. அந்த புகார் விரைவில் வேகம் பெறும் என தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொடநாடு வழக்கில் வேலுமணியின் சகோதரர் அன்பரசன், கொடநாட்டை கொள்ளை யடித்த குற்றவாளிகளுக்கு உதவி செய்தார் என கொடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் வாக்குமூலம் அளித்துள்ளார். கொடநாடு வழக்கைப் பொறுத்த வரை அதில் எடப் பாடி மிகவும் சீரிய ஸாகவே இருக் கிறார். அந்த வழக் கில் எடப்பாடி மீதான குற்றச் சாட்டுகளை அவர் எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் நிரூ பிக்கக்கூடிய அள வில் இருக்க வேண் டும் என மிக மிகக் கவனமாக சி.பி. சி.ஐ.டி. தொடுத் திருக்கிறது என் கிறது காவல்துறை வட்டாரங்கள். அ.தி.மு.க. அமைச் சர்கள் மீதான மற்ற வழக்குகளும், எடப்பாடி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, கொடநாடு வழக்கு என அனைத்தும் விரைவில் வேகம் பெறும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அ.தி.மு.க.வில் வேலுமணியும் எடப்பாடியும் ராசியாக இல்லை. வேலுமணி சசிகலவுடன் சேர்ந்து எடப்பாடிக்கு எதிராக கோஷ்டி சேர்த்து வருகிறார். இந்நிலையில் வேலுமணிக்கு எதிராகத் தொடரப் பட்ட இந்த வழக்கு அவரை பலவீனப்படுத்தும் என அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் எடப்பாடி மகிழ்ச்சியடைந்தாலும், அ.தி.மு.க.வை ஊழல் வழக்குகள் மூலம் தி.மு.க. பலவீனப்படுத்தும் என்கிற அச்சமும் எடப்பாடிக்கு வந்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இந்த வழக்கைத் தொடர்ந்து இதுபோல வழக்குகள் அ.தி.மு.க. முன்னாள்அமைச்சர்கள் மீது தொடுக்கப் படுமா? தொடுக்கப்படும் வழக்குகள் ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்குபோல நடத்தப்பட்டு தண்டனை கிடைக்குமா? என்கிற கேள்விகள் எழுந் துள்ளன. ஆனால் எடப்பாடி ஆட்சிக் காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு கள் ஒவ்வொன்றுக்கும் அவர்கள் கோர்ட் படிகளில் ஏறி பதில் சொல்லிவருவதைப் பார்க்கும்போது, இந்த வழக்கு நிச்சயம் வேலுமணிக்கு பெரிய தலை வலியை உருவாக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.