Skip to main content

30 வருட சிகரெட் பழக்கம்... கருப்பாக மாறிய நுரையீரல்!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

சிகரெட் பழக்கம் உடலுக்குக் கேடு என்று சிகரெட் பாக்கெட்டுகளில் இருந்தாலுமே, யாருமே அதை மதிப்பதில்லை. அதனால் வரும் விபரீதங்களை மக்கள் உணருவதில்லை. இந்நிலையில், சீனா நாட்டில், சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்து சிகரெட்  புகைத்துக்கொண்டிருந்த நபரின் நுரையீரல் கறுப்பு நிறமாக மாறியிருந்தது. அதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 

j



அந்த நபர், தான் இறந்த பின் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்திருந்தனர்.சமீபத்தில் அவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள், உள்ளுறுப்புகளை வெளியே எடுத்தனர். அப்போது,  இதுவரை யாருக்கும் இல்லாத வகையில், அந்த நபரின் நுரையீரல் கருப்பாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இதனாலதான்டா கெட்டு போறீங்க...'' - ரோட்டிலேயே லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்மணி... வைரலாகும் வீடியோ!  

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

The woman who bought the left right on the road ... The video goes viral!

 

அண்மைக்காலமாகவே பள்ளி சிறார்கள், கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் கண்டனத்தைப் பெற்றுவருகின்றன. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பள்ளி சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி அவ்வப்போது பேரதிர்ச்சியை தருகிறது.

 

The woman who bought the left right on the road ... The video goes viral!

 

இப்படி இருக்க, பள்ளி சிறுவன் ஒருவன் பள்ளி சீருடையுடன் தெருவில் கேஷுவலாக புகைப்பிடித்துச் செல்ல, அதனைக் கண்ட பெண்மணி ஒருவர் அந்தப் பள்ளி மாணவனைப் பிடித்து லெஃப்ட் ரைட் வாங்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்தக் காட்சியில் மாணவன் பள்ளி சீருடையுடன் சிகரெட் புகைப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பெண்மணி, அந்த மாணவனை சட்டையோடு பிடித்து, ''உன்ன உன் அம்மா அப்பா எல்லாம் கஷ்டப்பட்டு வளர்க்குறாங்க... இப்படி ரோட்ல சாதாரணமா புகைப்பிடிக்கிறனா இந்தப் பழக்கம் உனக்கு இப்போ இருந்திருக்காது... ஆரம்பத்திலேயே இருந்திருக்கும்... படிக்கப் போற இடத்திற்கு இப்படித்தான் தம் அடிச்சிட்டு போவியா... ரோட்ல பெரியவங்க எல்லாம் போறாங்கன்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம போற.. இதனாலதான்டா கெட்டுப் போறீங்க...'' என சட்டையைப் பிடித்துக்கொண்டு சிறுவனை அடிக்கப் பாய்ந்தார்.

 

''உனக்கு மனசாட்சி இல்ல... என்னடா யூனிஃபார்ம் போட்டு சிகரெட் குடிக்குறோமே, யார்னா கேட்க மாட்டங்களானு... உன் அம்மா அப்பா ஃபோன் நம்பர் கொடு, இல்லன்னா போலீசில் ஒப்படைப்பேன்...'' என கடுமையாக எச்சரித்தார். ''இன்னைக்கு நீ சிகரெட் கேட்டால் நாளைக்கு கஞ்சா கேட்பயே நீ... உன் வீடு எங்க இருக்கு சொல்லு... உங்க அப்பா நம்பர் வேணும்... வீட்டோட முடிக்கவா இல்ல, ஸ்டேஷன்ல முடிக்கவா...” என எச்சரிக்க, அந்த மாணவன் ''அக்கா... அக்கா...'' என கெஞ்சினான். அதன்பின் எச்சரித்த அந்தப் பெண்மணி புத்திமதி சொல்லி அந்த மாணவனை அனுப்பிவைத்தார். சமூகவலைதளத்தில் வெளியான இந்த வீடியோ வைரலாக, அந்தப் பெண்மணிக்குப் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.  

 

 

Next Story

"எனக்கு சமமா உக்காந்து பீடி குடிக்கிறியா?" - ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிய இளைஞர்!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

THENI DISTRICT INCIDENT  POLICE INVESTIGATION

 

சமமாக அமர்ந்து பீடி குடித்த பட்டியல் இனத்தவரை அரிவாளால் வெட்டிய இளைஞரை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

 

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் அப்பகுதியில் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரும் அமர்ந்து புகைபிடித்துள்ளார். இதனைக் கணடு ஆத்திரமடைந்த அலெக்ஸ் பாண்டியன், 'எனக்குச் சமமாக அமர்ந்து நீயும் புகைபிடிப்பதா?' எனச் சாதியின் பெயரைச் சொல்லித் திட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த பழனிச்சாமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து விசாரணை நடத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ், அலெக்ஸ் பாண்டியன் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, பழனி செட்டிப்பட்டி காவல்துறையினர், அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.