Skip to main content

பாசிச ஆட்சியாளர்களை எதிர்க்க கல்வியே ஆயுதம்! காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு அறிக்கை!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக சிறுபான்மை பிரிவின் மாநில தலைவர் அஸ்லம் பாஷா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,

 

 


மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வருவதை குறித்து இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை சமூகம் பெரும் கவலை அடைந்து இருக்கலாம். கடந்த 5 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் இக்லாக் படுகொலை, ஜுனைத் படுகொலை போன்ற கொடூர சம்பவங்கள் இந்த கவலைக்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் இதே 5 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் நடந்த மற்றொறு சம்பவத்தையும் நினைவுகூறுவோம்.

 

education

 

முஹமது முஹ்ஸீன் என்ற முஸ்லீம் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிடுகின்றார், பிரதமர் உடனே அவரை பணியிலிருந்து சஸ்பென்ட் செய்கிறார், ஒரு வாரத்தில் அந்த முஸ்லீம் அதிகாரி சஸ்பென்ட் உத்தரவை நீதிமன்றம் மூலம் ரத்து செய்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மீண்டும் பணியாற்றிவருகின்றார்.



கல்வி அறிவை வளர்த்து கொண்டு அரசு அதிகாரியாக இருக்கும் ஒரு இஸ்லாமிய சிறுபான்மை சமூதாயத்தை சேர்ந்தவரை பிரதமராக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பத்துபைசா பிரயோஜனம் இல்லாத ரவுடிகளால் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை மக்களை துன்புறுத்தப்படுகிறதென்றால் இந்த சமூகம் கல்வியிலும் அரசு பணியிலும் பின் தங்கியிருப்பது மிக முக்கிய காரணம், கல்வி கற்று அரசு அதிகாரியாக இருந்தால் இந்த ரவுடிகள் தாக்க முற்படுவார்களா ?



சிறுபான்மை சமூகமாக இருப்பதினால்தான் இஸ்லாமிய சமூகம் துன்புறுத்தப்படுகின்றது என்ற வாதம் ஏற்புடையதல்ல. இஸ்லாமியர்களைவிட சிறுபான்மையாக இருக்கும் சமூகங்கள் இந்தியாவில் இஸ்லாமியர்களை போல் துன்புறுத்தப்படுவதில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் அந்த சமூகங்கள் கல்வியில் முன்னேறி, அரசு பணிகளில் பெரும் பங்காற்றுவதை அறியலாம்.

 


மத்திய கிழக்கில் யூதர்கள் சிறுபான்மையினர்தான், பெரும்பான்மை அரபுகளால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஹிட்லரால் துன்புறுத்தப்பட்ட யூத சமூகம் இன்றைக்கு உலகின் சக்திவாய்ந்த சமூகமாக இருக்கிறதென்றால் அறிவியல், தொழில்நுட்பத்தில் அவர்களின் அறிவு வளர்ச்சி தான் காரணம்.

 


ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனால்தான் பாதுகாப்பு கிடைக்குமா ? அப்படி என்றால் எல்லோரும் முஹமது முஹ்ஸீன் போல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முடியுமா ? இது நடைமுறை சாத்தியமா ? என நீங்கள் நினைக்கலாம். அரசு துறையில் தன் சதவீதத்திற்கு ஏற்ற பங்களிப்பு இஸ்லாமிய சமூகத்திற்கு போதுமானது, இது இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை மக்களை அநியாயமாக தாக்க நினைக்கும் ரவுடிகளை உளவியல் ரீதியாக தடுக்கும்.

 



உண்மையில் தற்போது முஸ்லீம்கள் மீது நடத்தபடுவது உளவியல் ரீதியிலான தாக்குதல்தான். ஒரு சில இஸ்லாமியர்களை துன்புறுத்தி, கொலை செய்து அதை வீடியோ எடுத்து இந்தியா முழுவதும் பரப்புகின்றார்கள், இதைபார்க்கும் முஸ்லீம்கள் அச்சப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம், உண்மையில் நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் நம்மை தாக்க போவதில்லை, ஆனால் தாக்கபடுவோம் என்ற பயத்தை உளவியல் ரீதியாக முஸ்லீம் சமூகத்திற்கு ஏற்படுத்துகின்றனர், இந்த பயம் தான் இஸ்லாமியர்களை இயல்பாக கல்வி கற்பதையும், தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதையும் தடுக்கும்.



இதை உளவியல் ரீதியாக எளிதாக வெல்லாம், ஆனால் இஸ்லாமிய சமூகம் இப்படிபட்ட சம்மபவங்களை அறிவுபூர்வமாக அணுகாமல் உணர்வுபூர்வமாக அணுகி, சூழ்சியில் வீழ்ந்துவிடுகின்றது.

 



இஸ்லாமிய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் செய்தி தான் சென்றடைய வேண்டுமே தவிர, இஸ்லாமியர்களை பயமுறுத்தும் செய்தி அல்ல. இதை இஸ்லாமிய சமூகம் உணர வேண்டும். ஒரு செய்தியை பரப்பும் முன் இது இஸ்லாமிய மாணவர்களை உளவியல் ரீதியாக எவ்வாறு பாதிக்கும் என சிந்தித்து செயல்படுங்கள்.

 



காங்கிரஸ் கட்சியினால் பிஜேபியை வீழ்த்துவது கடினமல்ல, இருந்தாலும் இஸ்லாமிய மாணவர்கள் தான் கல்வியில் கவனம் செலுத்தி அரசு பணியில் அமர்வதற்கான போட்டி தேர்வுகளில் வெல்லும் அளவிற்கு தங்களை தயார்படுத்திகொள்ள வேண்டும். தனியார் துறைகளில் உள்ள உயர்பதவிகளில் அமர்ந்து பொது சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மன நிலையை மாற்றி , பிரித்தாளும் சூழ்சியை முறியடிக்கும் அளவிற்கு தங்களின் கல்வி அறிவையும் , திறமையையும் வளத்துகொள்ள வேண்டும்.வியாபார துறையில் விருப்பம் உள்ள மாணவர்களும் அறிவியல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்கால வியாபார சந்தையை தமதாக்க முயலவேண்டும்.

 



இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை சமூகத்தின் முன் தற்போதுள்ள ஒரே வழி கல்வி அறிவு சார்ந்த வளர்ச்சியை நோக்கி பயணிப்பதுதான். இவ்வார் அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.