Skip to main content

பெண்ணுக்காகப் போதையில் கொலை செய்த நண்பன் தப்பியோட்டம்! 

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

CUDDLore district youth incident police investigation


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், நேற்று (10/10/2021) நள்ளிரவு அவசர ஊர்தியின் மூலம், 25 வயதுமிக்க அருண்ராஜ் என்பவர் ரத்த வெள்ளத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த  மருத்துவர்கள் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டதைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டபோது சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 108 அவசர ஊர்திக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தது யார் என்றும், எந்த இடத்தில் இருந்து அழைத்துவரப்பட்டார் என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கினர். விசாரணையில்,  விருத்தாச்சலம் அண்ணா நகர் பகுதியிலிருந்து 108 அவசர ஊர்திக்கு விபத்து ஏற்பட்டதாகக் கூறி அழைப்பு வந்தது தெரியவந்தது. அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் வழிநெடுக ரத்தம் சிதறிக் கிடப்பதும்,  ரத்தம் படிந்த சட்டை கிடைப்பதையும் கண்டறிந்தனர். 

 

மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளை சோதனையிட்டபோது திரு.வி.க. நகரைச் சேர்ந்த நபிஸ் என்பவர் தனது மனைவியுடன் வசித்துவந்த வாடகை வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்பு 108 அவசர ஊர்திக்கு தொலைபேசி மூலம் அழைத்த விடுத்த நபர் யார் என்றும் நபிஸின் நட்பு வட்டாரங்கள் யாரெல்லாம் என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டபோது கத்திக்குத்தில் இறந்த இளைஞர், நபிஸின் நண்பர் அருண்ராஜ் என்பது தெரியவந்தது. 

 

மேலும் இது தொடர்பான விசாரணையில், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ஆரோக்கியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருண்ராஜ், விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்த கலை, வி.என்.ஆர் நகரைச் சேர்ந்த மனோஜ், திரு.வி.க நகரைச் சேர்ந்த நபிஸ், வடலூரைச் சேர்ந்த அப்பு என்கிற பிரேம் ஆகிய 5 இளைஞர்களும்  நண்பர்களாக இருந்துவந்துள்ளனர்.

 

இந்நிலையில், நேற்றிரவு (10/10/2021) அருண்ராஜை தொலைபேசி மூலமாக விருத்தாச்சலத்திற்கு வரவழைத்துள்ளனர். பின்னர் அனைவரும்  ஒன்றாக நபிஸின் வீட்டில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, பெண் தொடர்பான  பிரச்சினையில் அப்பு என்கிற பிரேம், தனது நன்பனான அருண்ராஜை கத்தியால் குத்தியுள்ளார்.  இதனைப் பார்த்த சக நண்பர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த  அருண்ராஜ்க்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாக கூறி 108 அவசர ஊர்தியை வரவழைத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது தெரியவந்தது. 

 

அதையடுத்து அப்பு (எ) பிரேம், மனோஜ், கலை ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர். முக்கிய குற்றவாளி நபிஸ் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளதால் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். 

 

மது போதையில் சக நண்பனை கொலை செய்து, 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.