Skip to main content

குற்றாலத்தில் வீணாகும் தண்ணீர்: மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கை!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

குற்றால அருவியில் நீர் செல்லும் சித்ராநதி ஆற்றுப்படுகை தூர்வாறும் பணிகள் துவக்கப்பட்டன.

 

அண்ணா பல்கலைக்கழகமும் நெல்லை மாவட்ட நிர்வாகமும் இணைந்து குற்றாலத்தில் மெயின் அருவியில் இருந்து விழும் தண்ணீர் செல்லும் ஆற்றுப்பகுதியை முற்றிலும் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
 

 District Collector's fast move!

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தின் பிரதான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி விவசாயத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக நெல்லை மாவட்டத்தில் புகழ் பெற்ற நதியான தாமிரபரணி நதியை சீரமைக்கும் பணி. நெல்லை மாவட்டத்தின் பெரிய குளங்களில் ஒன்றான மானூர் பெரிய குளம் உள்ளிட்ட பல குளங்கள் தூர் வாரப்பட்டு அங்கு அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

 


குற்றாலத்தில் மெயின் அருவியில் இருந்து விழும் தண்ணீர் செல்லும் ஆற்று பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக புதர்கள் மண்டியும் குப்பை கூழங்கள் நிறைந்தும் மண் திட்டுக்களும் நிறைந்தும் காணப்படுகிறது.  இதன்மூலம் இங்கிருந்து தென்காசி சிற்றாறு செல்லும் பாதை அடைபட்டு தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. 

 

 

இந்த ஆற்று பகுதியை நெல்லை மாவட்ட நிர்வாகமும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நம் தாமிரபரணி என்ற அமைப்பும் சேர்ந்து சீரமைக்க முடிவு செய்தன. பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த பணியில் கை கோர்க்க திட்டமிட்டுள்ளது.

 

 District Collector's fast move!

 

இதற்கான முதல் கட்ட பணிகள் குற்றாலத்தில் இன்று தொடங்கியது . நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் பழனி, அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குனர் டாக்டர் சக்தி நாதன், நம் தாமிரபரணி அமைப்பு நிர்வாகிகள் சாமி,.நல்ல பெருமாள்,  வித்யாசாகர்,  முகமது இப்ராஹிம், கணபதி பாலசுப்ரமணியன்,  தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.  வேங்கடரமணா, தென்காசி கோட்டாட்சியர் சுந்தர்ராஜ், வட்டாட்சியர் சண்முகம், சிற்றாறு வடி நிலக்கோட்ட செயற்பொறியாளர் ஜெயபால்,   நம் தாமிரபரணி அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
 

 

குற்றாலத்தில் அடுத்த மாதம் சீசன் துவங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள நிலையில் தற்போது அருவிகளில் தண்ணீர் வராததால் அந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆற்றின் வழிப்பாதையை முற்றிலும் சீரமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் இரு வாரங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.
 

 

இப்பணிகளின் பயனாய் மாவட்டத்தின் பெரியகுளங்களைக் கொண்ட மானூர் பகுதி குளங்கள் நீர் வளம் பெறும். விவசாயம் பயனடையும் என்பது கவனிக்கப்படத்தக்கது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.