Skip to main content

காத்திருந்த போலீஸ் படை!! தப்பிய உதய குமார்!

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

தேசிய அணுமின் கழகம் அணு உலைக் கழிவுகளை நெல்லை மாவட்டத்தின் கூடங்குளத்தில் இயங்கி வருகிற அணுமின் நிலைய வளாகத்தில் அமைப்பதற்கான ஏற்பாட்டினை செய்து வருகிறது. அது தொடர்பாக மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிற நிலையில், கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளரும், பச்சைத் தமிழகம் நிறுவனருமான சுப.உதயகுமாரின் தலைமையிலான அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

 

 Waiting Police Force !! Udaya Kumar  escaped!!



ரஷ்ய இந்திய கூட்டு முயற்சியால் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியுடன் கொண்ட இரண்டு அணுமின் உலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு மேலும் நான்கு அணு உலைக்கான அமைப்பு பணிகளும் நடந்தேறி வருகின்றன. 

 

 Waiting Police Force !! Udaya Kumar  escaped!!



இந்தநிலையில், அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக போராட்டக் குழுவினரை ஒன்று திரட்டி கலெக்டர் அலுவலகம் செல்ல எதிர்ப்பு அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக. அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நெல்லை வருவதாக இருந்தது. அந்த ரகசிய தகவலால் உளவுப்பிரிவு மற்றும் போலீசார்கள் உதயகுமாரைக் கண்காணிக்க நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

 

 

 Waiting Police Force !! Udaya Kumar  escaped!!



இதனிடையே நாகர்கோவிலிலிருந்து கிளம்பிய சுப.உதயகுமார் நெல்லைக்கு பஸ் ஏறினார். பேருந்து நாங்குநேரி கடந்த பிறகு உதயகுமார் மாயமாகிவிட்டார். 

 

 Waiting Police Force !! Udaya Kumar  escaped!!



தான் கைது செய்யப்படலாம் என்ற தகவலால் அவர் மூன்றடைப்பு தாண்டி இறங்கியவர் காரில் சென்றுவிட்டதாக ஸோர்சுகள் தெரிவிக்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில், மதியம் மேல் வரை காத்திருந்த  போலீசார் ஏமாற்றமடைந்தனர். ஆனால் போலீஸ் தரப்பிலோ அது போன்ற திட்டமில்லை என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.